மின் தடை ஏற்பட்ட இடங்களில் மீண்டும் மின்சா ர விநியோகம்

மின் தடை ஏற்பட்ட இடங்களில் மீண்டும் மின்சா ர விநியோகம்

1 mins read
00ae0dce-b783-479b-897d-4af7663c4975
-

சென்னை: தமி­ழ­கத்­தில் கன­மழை, பெரு­வெள்­ளம் கார­ண­மாக பாது­காப்பு கருதி பல இடங்­களிலும் துண்­டிக்­கப்­பட்டிருந்த மின்சாரம் மீண்­டும் இப்போது சீராக விநி­யோ­கிக்­கப்­பட்டு வருவதாக மின்­சா­ரத் துறை அமைச்­சர் செந்­தில்­ பா­லாஜி தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழ­கத்­தில் 36,000 ஊழி­யர்­களும் சென்­னை­யில் 4,000 மின்­வா­ரிய ஊழி­யர்­களும் மின் இணைப்­பு­க­ளைச் செப்பனிடும் பணி­யில் ஈடு­ப­ட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சென்னை அண்­ணா­சா­லை­யில் தமிழ்­நாடு மின்­சார வாரிய அலு வல­கத்­தில் அனைத்து பொறி யாளர்­க­ளு­ட­னும் ஆலோ­சனை நடத்­திய அமைச்சர், சென்­னை­யில் 66,000 வாடிக்கையாளர்களின் மின் இணைப்­பு­கள் துண்டிக்கப்பட்டு இப்போதுவரை 38,000 இணைப்­பு­தா­ரர்­க­ளுக்கு மின் இணைப்­பு­கள் வழங்­கப்­பட்டு உள்­ள­தாகவும் எஞ்சி­யி­ருக்­கும் 28,000 வீடு­க­ளுக்கு மின் இணைப்­பு­கள் வழங்­கும் பணி துரிதமாக நடை­பெற்று வரு­வ­தா­க­வும் தகவல் தெரிவித்துள்ளார்.