'காய்கறிகளின் விலை குறைய நடவடிக்கை'

'காய்கறிகளின் விலை குறைய நடவடிக்கை'

1 mins read
ce829361-100c-473e-bf02-b6851f853d78
-

சென்னை: மழை பாதிப்­பால் காய்­க­றி­க­ளின் வரத்து இல்­லா­மல் மாநி­லம் எங்­கும் காய்­க­றி­க­ளின் விலை இரு­ம­டங்­காக உயர்ந்­துள்ள நிலை­யில், இவற்­றின் விலை­யைக் குறைக்­க­வும் நட­மா­டும் காய்­க­றிக் கடை­க­ளுக்கு ஏற்­பாடு செய்­ய­வும் திட்­ட­மிட்­டுள்­ள­தாக வேளாண்­மைத்­துறை அமைச்­சர் எம்.ஆர்.கே. பன்­னீர்­செல்­வம் உறு­தி­ய­ளித்­துள்­ளார்.

கடந்த பல மாதங்­க­ளாக கொரோனா பாதிப்­பால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த பெரும்­பா­லான மக்­க­ளின் வாழ்­வா­தா­ரம், இப்­போது மழை­யால் பாதிக்­கப்­பட்டு வரு­கிறது.

மழை­யின் தாக்­கத்­தால் விவ­சாயிகளால் வேலைக்­குச் செல்ல முடி­ய­வில்லை. அதே­போல் நடமாடும் காய்­கறி வண்டி வியா­பா­ரி­க­ளின் வாழ்­வா­தா­ர­மும் பாதிக்­கப்­பட்டு உள்­ளது.

கிருமி பாதிப்பு அதி­க­மாக இருந்த நேரத்­தில் 48,000 நட­மா­டும் காய்­க­றிக் கடை­கள் பத்தே நாட்­களில் அமைக்­கப்­பட்­டன.

அதே­போன்று காய்­க­றி­கள், பழங்­கள் தட்­டுப்­பா­டின்றி கிடைத்­திட கூட்­டு­ற­வுத்­துறை மூல­மாக அரசு இப்போதும் நட­வ­டிக்கை எடுக்­கும் எனக் குறிப்­பிட்­டுள்­ளார்.