தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐந்து நாள்கள் தொடரும் மழை; 229 நிவாரண முகாம்களில் 12,000 பேர் அடைக்கலம் 200 இலவச மழைக்கால சிகிச்சை முகாம்களை தொடங்கிய முதல்வர்

2 mins read
0dfa1e35-3151-4a66-8c82-2655d0a55e44
சென்னையில் 200 சிறப்பு மருத்துவ முகாம்களைத் தொடங்கிவைத்தார் முதல்வர். ஒரு மூதாட்டிக்கு சிகிச்சை அளிப்பதை முதல்வருடன் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சுற்றி நின்று கவனிக்கின்றனர்.படம்: ஊடகம் -

சென்னை: மழைக்­கால நோய்­களில் இருந்து பொது­மக்­க­ளைப் பாது­காக்­கும் வகை­யில், சென்­னை­யில் 200 இல­வச சிறப்பு மருத்­துவ முகாம்­களை முதல்­வர் மு.க.ஸ்டா­லின் நேற்றுத் தொடங்­கி­வைத்­தார்.

தமி­ழ­கத்­தில் கடந்த ஒரு வார­மாக பர­வ­லாக கன­மழை பெய்து வரு­கிறது. இன்­னும் பல இடங்­களில் மழை­நீர் வடி­யா­மல் தேங்கி நிற்­ப­தால் தொற்று நோய்­களும் தொற்றா நோய்­களும் ஏற்­படும் அபா­யம் உள்­ள­தா­கக் கூறப்படு­கிறது.

இந்­நி­லை­யில், தொடர்­மழை கார­ண­மாக மலே­ரியா, டெங்கி போன்ற நோய்­க­ளால் மக்­கள் பாதிக்­கப்­ப­டா­மல் தடுக்க, தேனாம்­பேட்டை ஆஸ்­டின் நக­ரில் மழைக்­கால இல­வச மருத்­துவ முகாமை முதல்­வர் தொடங்கி வைத்­தார்.

இதை­ய­டுத்து, இம்­மு­காம்­கள் மூலம் பொது­மக்­க­ளுக்­குத் தேவை­யான மருந்­து­கள் உள்­ளிட்­ட­வற்றை உரிய நேரத்­தில் வழங்க சுகா­தா­ரத்­துறை சார்­பில் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இத­னால், கொரோனா பாதிப்பு, கன­மழை வெள்­ளப் பாதிப்­பால் அடுத்­த­டுத்து தங்­க­ளது வாழ்வா தாரம் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்டு வரும் மக்­கள் ெபரி­தும் பயன் அடை­வார்­கள் என்­றும் நம்­பப்­ப­டு­கிறது.

காய்ச்­சல், சளி, இரு­மல் போன்ற உடல்­ந­லப் பாதிப்­பு­களும் பரி­சோ­திக்­கப்­பட்டு தகுந்த சிகிச்­சை­யும் மருந்­து­களும் இல­வ­ச­மாக வழங்­கப்­படும் என­வும் தமி­ழக ஊட­கத் தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

இதற்­கி­டைேய, சென்­னை­யில் சாலை­கள், குடி­யி­ருப்­புப் பகு­தி­களில் தேங்­கி­யுள்ள மழை­நீர் அகற்­றப்­பட்டு வரு­வ­தாக அமைச்­சர் எ.வ.வேலு சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார். வரும் காலங்­களில் மழை­நீர் தேங்­கா­த­வாறு நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­குத் திட்­டம் வகுக்­கப்­படும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

15 மாவட்டங்களில் 12,000 பேர்

தமி­ழ­கத்­தில் கன­மழை கார­ண­மாக 14 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அமைச்­சர் கேகே­எஸ்­எஸ்­ஆர் ராமச்­சந்­தி­ரன் தெரி­வித்­துள்­ளார். மழை­யால் பாதிக்­கப்­பட்ட 15 மாவட்­டங்­களில் அமைக்­கப்­பட்­டுள்ள 229 நிவா­ரண முகாம்­களில் 12,000க்கும் அதி­க­மா­னோர் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்­றும் அவர் கூறி­னார்.

ஐந்து நாள்கள் மழை தொடரும்

இதற்­கி­டையே, வங்­கக் கட­லில் உரு­வான காற்­ற­ழுத்த தாழ்வு மண்­ட­லம் சென்­னைக்கு அருகே கரையை கடந்­த­தாக அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், இன்று புதிய காற்­ற­ழுத்­தத் தாழ்­வுப் பகுதி உரு­வாக வாய்ப்­புள்­ள­தாக இந்­திய வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது. இதன் கார­ண­மாக, அடுத்த ஐந்து நாள் களுக்கு தமிழ்­நாடு, புதுச்­சே­ரி­யில் ஒரு சில இடங்­களில் கன­மழை பெய்ய வாய்ப்­புள்­ள­தா­க­வும் வானிலை மையம் கூறியுள்­ளது.