தடம் புரண்ட விரைவு ரயில்: உயிர் தப்பிய 2,348 பயணிகள்

தடம் புரண்ட விரைவு ரயில்: உயிர் தப்பிய 2,348 பயணிகள்

2 mins read
93345e3c-2963-4083-933f-ee7a4c9cc707
கேரள மாநிலம், கண்ணூரில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற விரைவு ரயில் தருமபுரி மாவட்டம், முத்தம்பட்டி அருகே தடம் புரண்டு நிற்கிறது. படம்: தமிழக ஊடகம் -

தரு­ம­புரி: விடாது ெபய்து வரும் கன­மழை கார­ண­மாக, முத்­தம்­பட்டி மலைப்­பா­தை­யில் பாறைக் கற்­கள் திடு­தி­டு­வென்று சரிந்து விழுந்த தில் கேரள மாநிலம் கண்­ணூரில் இருந்து பெங்­க­ளூரு சென்ற விரைவு ரயில் தடம் புரண்­டது.

ரயி­லில் 2,348 பய­ணி­கள் பய­ணம் செய்­த­தா­க­வும் அவர்­கள் அனை­வ­ரும் பாது­காப்­பாக இருப்­ப­தா­க­வும் ரயில்வே அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

"மலை­யில் இருந்து உருண்ட பாறை­கள் ஓடும் ரயி­லில் மோதி­ய­தால் விரைவு ரயி­லின் ஏழு பெட்­டி­கள் தடம் புரண்­டன. நேற்று அதி­கா­லை­யில் ஆழ்ந்த தூக்­கத்­தில் இருந்த பய­ணி­கள் பயங்­கர சத்­தம் கேட்டு அல­றி­ய­டித்­துக்­கொண்டு எழுந்­துள்ளனர். இதையடுத்து, ரயில் உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட்­டது," என தென்­மேற்கு ரயில்வே விவ­ரம் ெவளி­யிட்­டுள்­ளது.

"தமிழ்­நாட்­டின் தோப்­பூ­ருக்­கும் சிவா­டிக்­கும் இடை­யில் முத்­தம்­பட்­டி­யில் விபத்து நடந்துள்ளது. ரயி­லில் பய­ணம் செய்­த­ 2,348 பேரும் பாது­காப்­பாக உள்ளதாகவும் விபத்தில் உயிர்சேதமோ, காயமோ ஏற்­ப­ட­வில்லை," என ரயில்வே அதிகாரி­கள் தெரி­வித்து உள்­ள­தா­க 'த நியூஸ் மினிட்' ஊட­கத் தக­வல் குறிப்பிட்டுள்­ளது.

"பாறாங்­கற்­களை அகற்ற புல்­டோ­சர் பயன்­ப­டுத்­தப்­பட்டு, சீர­மைப்­புப் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. விபத்து நடந்த இடத்­தில் இருந்து தோப்­பூ­ருக்­கும் பெங்­க­ளூ­ருக்­கும் பய­ணிகளை அழைத்­துச் செல்ல ஐந்து பேருந்­து­கள் ஏற்­பாடு செய்­யப்­பட்டு உள்­ளன. அத்­து­டன், பய­ணி­க­ளுக்கு குளிர்­பா­னம், தண்­ணீர் வழங்­க­வும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது," என்று ரயில்வே அதி­கா­ரி­கள் மேலும் கூறியுள்ளனர்.

வனப்­ப­குதி என்­ப­தால் இப்பகு­தி­களில் இயக்­கப்­படும் ரயில்­கள் மெது­வா­கவே கடந்து வரு­வ­தால் பெரும் விபத்து தவிர்க்­கப்­பட்­டது.

தொடர்­ம­ழை­யி­லும் தடம் புரண்ட பெட்­டி­களைச் சரிப்­ப­டுத்­தும் பணி­யிலும் பாதை சீர­மைப்புப் பணி­களிலும் ரயில்வே துறை­யி­னர் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.