பாலியல் வன்கொடுமை: சுட்டுப் பிடிக்கப்பட்ட குருவி விஜய்

1 mins read
6079cb7d-029b-41ae-a16b-f14c505eac52
குருவி விஜய். படம்: ஊடகம் -

மதுரை: மதுரை அண்ணா நக­ரில் ரவுடி குருவி விஜய் என்­ப­வ­ரின் காலில் துப்­பாக்­கி­யால் சுட்­டுக் கைது செய்­துள்­ள­னர் போலி­சார். இவர்­மீது கொலை, கொள்ளை உள்­ளிட்ட பல வழக்­கு­களும் நிலு­வை­யில் உள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

மதுரை அண்­ணா­ ந­க­ரில் உள்ள மீனவ சங்க கட்­ட­டம் அருகே நள்­ளி­ரவு நேரத்­தில் ஒரு பெண்ணை பாலி­யல் வன்­கொ­டுமை செய்ய முயன்­றுள்­ளார் குருவி விஜய். அப்­போது அந்­தப் பெண் சத்­தம் போட அக்­கம்­பக்­கத்தினர் காவல்­நி­லை­யத்­துக்குத் தக­வல் கூறினர்.

இதையடுத்து, அங்கு வந்த போலி­சா­ரைக் கண்­ட­தும் ரவு­டிக் கும்­பல் அவர்­க­ளைத் தாக்­கி­விட்டு தப்­பிக்க முயன்­றுள்­ளது.

ஆனால், கும்­பலை விடா­மல் போலி­சார் துரத்த, அவர்­கள் போலி­சாரை கட்­டை­க­ளா­லும் கற்­க­ளா­லும் தாக்­கி­விட்டு தப்­பி ஓடினர்.

இதை­ய­டுத்து, ரவு­டிக்­கும்­பலை விரட்­டிச் சென்ற போலி­சார் ஒரு கட்­டத்­தில் துப்­பாக்­கிச்­சூடு நடத்­தி­யதில் விஜய் சரிந்து விழுந்­தார். இதை­ய­டுத்து, ஒட்­டு­மொத்த ரவுடி கும்­ப­லை­யும் பிடித்த போலி­சார், அண்­ணா­ந­கர் காவல்நிலை­யத்­தில் வைத்து விசா­ரித்து வரு­கின்­ற­னர்.

குருவி விஜய்க்கு மதுரை ராஜாஜி அரசு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது. பாலியல் வன்கொடுமை முயற்­சிக்கு ஆளான பெண்­ணி­ட­மும் ரக­சிய விசா­ரணை நடந்ததாகத் தகவல்.