தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த தங்கையைக் காத்த அக்கா

2 mins read
2f3bb174-a27c-4cd1-820f-424ae54c057a
தனது உயிர்காத்த அக்காவுடன் ஹர்ஷினி. படம்: பிபிசி ஊடகம் -

தேவ­கோட்டை: தேவ­கோட்டை அருகே மூடப்­ப­டாத ஆழ்­து­ளைக் கிணற்­றுக்குள் கால் இடறி விழுந்து காப்­பாற்­றும்­படி அல­றிய ஒன்பது வயது தங்கை ஹர்ஷினியின் உயிரை சமயோசிதமாகச் செயல்­பட்டு அவரது அக்கா தேவி­ஸ்ரீ காப்பாற்றி உள்ளார்.

இதனால் தேவி­ஸ்ரீக்கு பல பக்­கங்­களில் இருந்­தும் பாராட்­டு­கள் குவிந்து வரும் நிலை­யில், கிரா­மங்­களில் பயன்­பாட்­டில் இல்­லாத ஆழ்­து­ளைக் கிண­று­கள் மரணக் கிண­று­க­ளாக மாறு­வ­தைத் தடுக்க­ அரசு உடனடி நட­வ­டிக்கைகளை எடுக்­க­வேண்­டும் என்று பொதுமக்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

சிவ­கங்கை மாவட்­டம், தேவகோட்டை அருகே உள்ள வெட்­டுக்­காட்டு கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர் பிரபு. இவ­ரது மூன்று பெண் குழந்­தை­களில் தேவி­ஸ்ரீ, 14, ஹர்­ஷினி, 9, ஆகிய இரு­வ­ரும் பள்ளி விடு­முறை என்­ப­தால் அரு­கில் உள்ள ஓடைப் பகு­தி­யில் ஆடு மேய்த்து விட்டுத் திரும்­பி­னர்.

அப்போது, அங்கிருந்த ஆழ் துளைக்கிணற்றில் விழுந்த ஹர்­ஷினி உதவி கேட்டு கத்தினார்.

தேவி­ஸ்ரீ ஓடி வரு­வ­தற்­குள் ஹர்­ஷினியின் உடல் குழிக்­குள் சென்று தலை­யும் கையும் மட்­டுமே வெளி­யில் தெரிந்­தது. தேவி­ஸ்ரீ சாமர்த்­தி­ய­மா­கச் செயல்­பட்டு தங்­கை­யின் தலை­மு­டி­யை­யும் கையை­யும் பிடித்­துக்­கொண்டு கூச்­ச­லிட, அரு­கில் இருந்­தோர் ஓடிவந்து ஹர்­ஷி­னி­யைக் காப்­பாற்­ற உதவி­னர்.

இதற்கிடையே, வரு­வாய்த்­துறை, ஊராட்சி ஒன்றிய அதி­கா­ரி­கள் ஆழ்­து­ளைக் கிணற்றை முழு­வ­து­மாக மண், மரங்­க­ளைப் போட்டு மூடி­னர்.

சிறுமி ஹர்­ஷினி பிபிசி தமிழ் ஊட­கத்­தி­டம் பேசி­ய­போது, "நான் ஐந்­தாம் வகுப்­பில் படிக்­கி­றேன். ஆடு மேய்த்­து­விட்டு வீடு திரும்­பி­ய­போது கல்­லில் கால் பட்டு அருகே இருந்த குழிக்­குள் விழுந்துவிட்­டேன். நெற்றி அள­வுக்கு குழிக்­குள் புைதந்த என்னை அக்காதான் எனது தலை­மு­டி­யைப் பிடித்து இழுத்து மிக­வும் கஷ்­டப்­பட்டு காப்­பாற்றினார். அவரால்தான் உயிர் பிழைத்­தேன்," என்­றார்.