விடாது மழை; வெள்ளத்தில் மிதக்கிறது கன்னியாகுமரி

விடாது மழை; வெள்ளத்தில் மிதக்கிறது கன்னியாகுமரி

2 mins read
3e7f14fd-ac3c-4643-ae15-36aff7cc9d4c
கன்னியாகுமரியில் திருப்பதிசாரம் என்ற கிராமத்தில் வெள்ளம் புகுந்துவிட்டது. மின்சாரம், குடிநீர் இல்லை. வீட்டில் தங்கியிருக்கவும் இயலாது என்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகிறார்கள். படம்: இந்திய ஊடகம் -

தீவுகளான 200 கிராமங்கள்; தண்ணீரில் 50,000 வீடுகள்; மழை தொடரும் என கணிப்பு

கன்­னி­யா­கு­மரி: தமிழ்­நாட்­டின் தலை­ந­க­ரம் சென்னையைப் பதம் பார்த்த வட­கி­ழக்­குப் பரு­வ­மழை, இப்­போது தென் தமிழ்­நாடு பக்­கம் திரும்பி உள்ளது.

கன்­னி­யா­கு­மரி மாவட்­டத்­தில் 24 மணி நேரத்­தில் 100மி.மீ. மழை பெய்­த­தால் மாவட்­டமே மூழ்­கி­விட்­ட­தா­கத் தெரி­விக்கப்படுகிறது.

தொடர்­மழை கார­ண­மாக அங்கு பல இடங்­களில் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்டுள்ளது.

அந்த மாவட்­டத்­தில் 200க்கும் மேற்­பட்ட கிரா­மங்­களில் வெள்­ளம் சூழ்ந்து தீவு­க­ளாக மாறி­விட்­ட­தா­க­வும் 50,000க்கும் மேற்­பட்ட வீடு­கள் நீரில் மிதப்­ப­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

தொடர்ந்து மழை பெய்­வ­தால் அணை­களில் தண்­ணீர் திறந்­து­வி­டப்­ப­டு­வ­தும் வெள்­ள­மும் ஏராள மான கிரா­மங்­க­ளுக்­குள் புகுந்­து­விட்­டது. ஆறு­களும் கால்­வாய்­களும் உடைப்­பெ­டுத்து தண்­ணீர் வீடு­க­ளைச் சூழ்ந்­து­விட்­டது.

வெள்­ளத்­தில் தோப்­பு­களும் தோட்­டங்­களும் விளை­நி­லங்­களும் மூழ்கிக்கிடப்­ப­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது. பல வீடுகள் இடிந்துவிட்டன. நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. ரயில்கள் ரத்தாயின. வீடு­களில் தண்­ணீர் புகுந்து இருப்­ப­தால் மின்­சா­ரம் துண்­டிக்­கப்­பட்­டது. மின்­சா­ரம், குடி­நீர், இருக்க இடம் இல்­லா­த­தால் பொது­மக்­கள் பெரும் பாதிப்­புக்கு உள்­ளாகி இருக்கிறார்கள்.

இத­னால் மக்­கள் அதி­காரி­களின் துணை­யு­டன் வீட்­டை­விட்டு வெளி­யேறி வரு­கி­றார்­கள். 2,000 பேர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இது­பற்றி கருத்து கூறிய ஒரு­வர், ''மூன்று நாள் மழைக்கே கன்­னி­யா­கு­மரி, தண்­ணி­யா­கு­ம­ரி­யாக மாறி­விட்­டது,'' என்­றார்.

இந்­த­நி­லை­யில், அந்த மாவட்டத்­தில் மேலும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்­சரித்து உள்­ளது. தமி­ழக அரசு மீட்­புப் பணி­களை­யும் நிவா­ர­ணப் பணி­க­ளை­யும் போர்க்கால அடிப்­ப­டை­யில் தொடங்கி இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்டது.

நாகர்­கோ­வி­லி­லும் திரு­நெல்­வேலி­யி­லும் கடும் மழை கார­ண­மாக பல பகு­தி­களில் மக்­கள் இயல்பு வாழ்க்­கையை இழந்து இருப்­ப­தா­கத் தக­வல்­கள் கூறின.

இவ்­வே­ளை­யில், அந்தமான் அருகே புதி­தாக உரு­வாகி இருக்­கும் காற்­ற­ழுத்­தத் தாழ்வுப் பகுதி கார­ண­மாக தமி­ழ­கத்­தில் அங்­கு­மிங்­கு­மாக மழை பெய்­யும் என்­றும் கன­ம­ழைக்கு வாய்ப்­பில்லை என்­றும் வானிலை மையம் கூறியது.