11 மாவட்டங்களில் கொவிட்-19 கிருமித்தொற்று அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று குறைந்து வருகிறது. என்­றா­லும் கோவை, சென்னை உள்ளிட்ட 11 மாவட்­டங்­களில் தொற்று அதி­க­ரித்து உள்­ள­தாக புள்­ளி­வி­வ­ரங்­கள் கூறின.

கடந்த 24 மணி நேரத்­தில் புதி­தாக 809 பேருக்குத் தொற்று ஏற்­பட்­ட­தாகவும் 14 பேர் மர­ண­மடைந்து­விட்­ட­தா­க­வும் அதி­கா­ர­பூர்வ தகவல்­கள் கூறின. இந்த மரண எண்­ணிக்கை முதல் நாள் வெள்­ளிக்­கி­ழமை வெறும் எட்­டாக இருந்­தது.

இத­னி­டையே, மாநி­லத்­தில் இப்­போது நடப்­பில் உள்ள கொரோனா கட்­டுப்­பா­டு­கள் இம்­மா­தம் 30ஆம் தேதி வரை நீட்­டிக்­கப்­படும் என்று தமி­ழக அரசு அறி­விப்பு வெளியிட்டு உள்­ளது.

இந்­நி­லை­யில், நேற்று மாநி­லம் முழு­வ­தும் 50,000க்கும் மேற்­பட்ட இடங்­களில் எட்­டா­வது தடுப்­பூசி முகாம்­கள் நடத்­தப்­பட்­டன.

அவற்­றில் குறைந்­த­பட்­சம் 200,000 ஊழி­யர்­களும் ஆயி­ரக்­கணக்­கான தொண்­டூ­ழி­யர்­களும் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

மாநி­லத்­தில் இது­வரை தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­மல் 1.6 கோடி மக்­கள் இருக்­கி­றார்­கள் என்­ப­தால் இம்­மாத முடி­வில் குறைந்­த­பட்­சம் ஓர் ஊசி­யா­வது அவர்­க­ளுக்­குப் போட்­டு­விட வேண்­டும் என்று அர­சாங்­கம் இலக்கு நிர்­ண­யித்துள்­ளது.

அதே­வே­ளை­யில், 70 லட்­சம் பேருக்கு இரண்­டா­வது தடுப்­பூசி போட­வேண்­டிய நிலை இருக்­கிறது. மழையும் விழாக்காலமும் தடுப்பூசி இயக்கத்திற்கு உகந்ததாக இல்லை என அதிகாரிகள் கூறுகிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!