தொண்டி: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள வேலாங்குடி கிராமத்தில் வாழ்ந்து வந்த நான்கு தலைமுறை கண்ட 132 வயதுப் பாட்டி சந்தனம்மாள் சனிக்கிழமை காலமானார்.
கடந்த 1889ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி பிறந்த சந்தனம்மாள், ஆரோக்கியம் என்ற வேளாணியை மணந்தார்.
அத்தம்பதிக்கு 10 பிள்ளைகள். அவர்களில் மூன்று மகன்களும் மூன்று மகள்களும் இப்போது நலமுடன் உள்ளனர்.
கணவர் ஆரோக்கியம் 1982ஆம் ஆண்டு காலமானர். மூதாட்டிக்கு 25 பேரன், பேத்திகள் உள்ளனர். 50 கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
மருத்துவமனைக்கே செல்லாத சந்தனம்மாள் மீன் குழம்பை விரும்பிச் சாப்பிடுவாராம்.

