பாலியல் தொல்லையால் 17 வயது மாணவி உயிர்மாய்ப்பு சம்பவம்; பெங்களூருவில் பள்ளி முதல்வரை போலிஸ் கைது

பாலியல் தொல்லையால் 17 வயது மாணவி உயிர்மாய்ப்பு சம்பவம்; பெங்களூருவில் பள்ளி முதல்வரை போலிஸ் கைது

2 mins read
43fa10e4-f390-4351-b424-a835f25e04c2
பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன். படம்: தமிழக ஊடகம் -

கோவை: ஆசி­ரி­ய­ரின் பாலி­யல் தொல்லை கார­ண­மாக 17 வயது மாணவி தன்­னைத் தானே மாய்த்­துக்­கொண்ட சம்­ப­வம் தொடர்­பில் பெங்­க­ளூ­ரு­வில் பதுங்கி இருந்த தனியார் பள்ளி முதல்வர் ஒருவர் போலி­சிடம் பிடி­பட்­டார்.

தேடப்­பட்டு வந்த மீரா ஜாக்­சன், 52, என்ற அந்த ஆசி­ரியை பெங்­க­ளூ­ரு­வில் கைது செய்­யப்­பட்டு போலி­சா­ரால் விசா­ரிக்­கப்­பட்டு வரு­வ­தாகத் தெரி­விக்கப்பட்டது.

பள்ளி மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பல முறை புகார் தெரி­வித்­தும் பள்ளி முதல்வர் எந்­த­வித நட­வடிக்­கை­யும் எடுக்­க­வில்லை என்று கூறப்­ப­டு­கிறது. இதை­ய­டுத்து மீரா ஜாக்­ச­னுக்கு எதி­ராக போக்சோ சட்­டத்­தின்­கீழ் குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

கோவை ஆர்.எஸ்.புரம் பகு­தி­யில் செயல்­படும் சின்­மயா வித்­யா­லயா என்ற பள்­ளி­யில் பிளஸ்-2 படித்து வந்த மாண­விக்குப் பாலியல் தொல்லை கொடுத்­த­தாக மிதுன் சக்­க­ர­வர்த்தி, 35, என்ற ஆசி­ரி­யர் கைதாகி ஏற்­கெ­னவே சிறை­யில் வைக்­கப்­பட்டு விசா­ரிக்­கப்­படு­கி­றார்.

மாணவி எழு­திய கடி­த­மும் அவர் பயன்­ப­டுத்­திய கைபேசி­யும் போலிஸ் புலன்­வி­சா­ர­ணை­யில் பயன்­ப­டுத்­தப்­படுகின்றன. ஆசி­ரி­யர் பாலி­யல் தொல்லை கொடுத்­த­தால் மாணவி தற்­கொலை செய்­து­கொண்­ட­தாகத் தெரி­ய­வந்­துள்­ளது.

இத­னி­டையே, மாண்ட மாணவி­யின் குடும்­பத்­தாரை தமி­ழக கல்வி அமைச்­சர் பொய்­யா­மொழி நேரே சென்று சந்தித்தார்.

இந்த விவ­கா­ரத்­தில் சந்தேக நபர்கள் எல்­லா­ரும் கைதாகி இருப்­ப­தா­க­வும் எதிர்­கா­லத்­தில் இத்­த­கைய சம்­ப­வங்­கள் நிக­ழா­மல் தடுக்க கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் பாதிக்­கப்­பட்ட மாண­வி­யின் குடும்­பத்­திற்கு அரசு உதவி வழங்­கும் என்­றும் தெரிவித்த அமைச்சர், தமிழக மாணவ, மாணவியர் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் உதவிக்கு 14417 என்ற எண்ணை அழைக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.