'முதல்வரின் முகவரி': பொதுமக்கள் கோரிக்கைகளை உடனே கவனிக்க ஏற்பாடு

'முதல்வரின் முகவரி': பொதுமக்கள் கோரிக்கைகளை உடனே கவனிக்க ஏற்பாடு

1 mins read
cfd2d228-c509-4643-b5a9-d63aa9d8ed7c
'முதல்வரின் முகவரி' என்ற துறையின் சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் பொது­மக்­கள் நேர­டி­யாக முதல்­வ­ரி­டம் புகார்கள், மனக்­கு­றை­கள், தேவை­க­ளைத் தெரி­விக்­க­வும் அவற்­றுக்கு அதி­கா­ரி­கள் உட­ன­டி­யாக செவி சாய்க்­கு­மாறு செய்­ய­வும் 'முதல்­வரின் முக­வரி' என்ற ஒரு புதிய துறை உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

உங்­கள் தொகு­தி­யில் முதல்-அமைச்­சர், முதல்-அமைச்­சர் உதவி மையம், குறை­தீர்ப்பு மேலாண்மை ஒருங்­கி­ணைப்பு அமைப்பு ஆகிய குறை­தீர்ப்பு துறை­கள் ஒருங்­கிணைக்­கப்­பட்டு புதிய துறை அமைந்­துள்­ள­தாக அர­சாணையில் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய துறை­யின் சிறப்பு அலு­வ­ல­ராக ஷில்பா பிர­பா­கர் சதீஷ் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

முதல்­வ­ரின் முக­வரி துறை­யில் ஒற்றை இணை­யத்­தள முகப்பு பயன்­ப­டுத்­தப்­பட்டு தீர்­வு காணப் படும் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.