விமானப் பயணிகளுக்கு 'தொற்றில்லை' சான்றிதழ் வேண்டாம்

விமானப் பயணிகளுக்கு 'தொற்றில்லை' சான்றிதழ் வேண்டாம்

1 mins read
81c50f3a-1b52-4e18-9ad3-04daf71474c9
-

சென்னை: இனி­மேல் தமி­ழ­கம் வரு­ப­வர்­க­ளுக்கு கொரோனா பரி­சோ­தனை சான்­றி­தழ் அவ­சி­யம் இல்லை என்று தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.

இந்­தி­யா­வின் கேரள மாநி­லம் நீங்­க­லாக, இதர மாநி­லங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் தமி­ழ­கம் வரும்­போது கொரோனா தொற்­றில்லை என்ற சான்­றி­த­ழைக் காட்­ட­த் தேவை யில்லை. ஆனால், 'இ-பதிவு' முறை அவ­சி­யம் என்று அரசு கூறியுள்ளது.

இது­வரை, விமா­னப் பய­ணம் மேற்­கொள்­ப­வர்­கள் தங்­க­ளது பய­ணத்­திற்கு முன்­பாக 72 மணி நேரத்­திற்­குள் செய்த கொரோனா பரி­சோ­தனை சான்­றி­த­ழைக் கொண்டு­வர வேண்­டும். ஏனெ­னில், கொரோனா தொற்­றில்லை என்­பதை உறு­திப்­ப­டுத்­தும் சான்றிதழைக் கொண்டு வரு­வதை அரசு கட்­டா­யப்­ப­டுத்தி இருந்­தது.

இந்­நி­லை­யில், இப்­போது இந்த நடை­முறை தளர்த்­தப்­பட்­டுள்­ளது.

இதன்­படி, கேரள மாநி­லத்தை தவிர்த்து, பிற மாநி­லங்­களில் இருந்து தமி­ழ­கத்­திற்கு வரு­வோ­ருக்கு கொரோனா சான்­றி­தழ் அல்­லது இரண்டு தவணை தடுப்­பூசி செலுத்­திய சான்­றி­தழ் அவ­சி­ய­மில்லை என்­றும் ஆனால், தமி­ழ­கத்­திற்கு வரு­வ­தற்­கான இ-பதிவு அவ­சி­யம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதே­ச­ம­யத்­தில் தமி­ழ­கத்­தில் இருந்து மற்ற மாநி­லங்­க­ளுக்­குச் செல்ல கொரோனா தொற்­றில்லை சான்­றி­தழ் அவ­சி­ய­மா­கும்.

கிரு­மிப் பர­வல் தமி­ழ­கத்­தில் கணி­ச­மாக குறைந்­துள்­ள­தும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­மா­கி­யி­ருப்­ப­தும் சான்­றி­தழ் தளர்­வுக்கு முக்­கிய கார­ண­மா­கக் கூறப்­ப­டு­கிறது.