சென்னை: தலைநகர் சென்னையில் தொடர்மழை நின்று நேற்று மேகமூட்டமாக இருந்த நிலையில், 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி கீதா தெரிவித்துள்ளார்.
சென்னையில் கனமழை பெய்து ஐந்து நாட்களாகியும் தலைநகரின் முக்கிய இடங்களில் தண்ணீர் வடியாத நிலை தொடர்கிறது. இதனால், மக்கள் ெபரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சில இடங்களில் தங்களது பகுதியில் உள்ள நீரை வெளியேற்றக் கோரி சாலை மறியல் உள்ளிட்ட போராட் டங்களும் நடந்து வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் மழைநீர் தேங்கிய 778 இடங்களில் 574 இடங்களில் மழைநீர் துரிதமாக அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
22 சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் அகற்றப்பட்டு போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 522 மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
69 நிவாரண முகாம்களில் 3,492 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழைநீர் அகற்றும் பணியில் 726 மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, சென்னையில் மழை காரணமாக தேங்கிய குப்பைக் கழிவுகளை மூன்று நாட்களுக்குள் அகற்றவேண்டும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.