சென்னையில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணிகள் துரிதம்

1 mins read
e1c7aee7-4341-483e-9fcc-af742e2a6849
தங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கக் கோரியும் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் வெள்ளநீரை அகற்றாததைக் கண்டித்தும் மின்சார விநியோகத்தை வழங்கும்படியும் அதிகாரிகளுக்கு எதிராக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ெபண்கள் போராட்டம் நடத்தினர். படம்: இபிஏ -

சென்னை: தலை­ந­கர் சென்­னை­யில் தொடர்­மழை நின்று நேற்று மேக­மூட்­ட­மாக இருந்த நிலை­யில், 16 மாவட்­டங்­களில் இன்று கன­மழை பெய்­யும் என சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்­ஞானி கீதா தெரிவித்துள்ளார்.

சென்­னை­யில் கன­மழை பெய்து ஐந்து நாட்­க­ளா­கி­யும் தலை­ந­க­ரின் முக்­கிய இடங்­களில் தண்­ணீர் வடி­யாத நிலை தொடர்­கிறது. இத­னால், மக்­கள் ெபரும் சிர­மத்திற்கு உள்­ளாகி வரு­கின்­ற­னர். சில இடங்களில் தங்களது பகுதியில் உள்ள நீரை வெளியேற்றக் கோரி சாலை மறியல் உள்ளிட்ட போராட் டங்களும் நடந்து வருகின்றன.

இந்நிலையில், சென்­னை­யில் மழை­நீர் தேங்­கிய 778 இடங்­களில் 574 இடங்­களில் மழை­நீர் துரிதமாக அகற்­றப்­பட்­டுள்­ள­தாக சென்னை மாந­க­ராட்சி அறி­வித்­துள்­ளது.

22 சுரங்­கப்­பா­தை­க­ளி­லும் தண்­ணீர் அகற்­றப்­பட்டு போக்­கு­வ­ரத்து அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் 522 மரங்­கள் அகற்­றப்­பட்­டுள்­ள­தா­க­வும் கூறியுள்ளது.

69 நிவா­ரண முகாம்­களில் 3,492 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழை­நீர் அகற்­றும் பணி­யில் 726 மின் மோட்­டார்­கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டு வருகின்றன என மாந­க­ராட்சி அதிகாரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

இதற்கிடையே, சென்னையில் மழை கார­ண­மாக தேங்­கிய குப்பைக் கழி­வு­களை மூன்று நாட்­களுக்­குள் அகற்றவேண்­டும் என மாந­க­ராட்சி ஆணை­யர் ககன்­தீப் சிங் பேடி உத்­த­ர­விட்­டுள்­ளார்.