தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

19 இட்லியைச் சாப்பிட்டவருக்கு ரூ.5,000 பரிசு

1 mins read
8bcfb907-32cb-46cd-8e81-2456ae64ec6f
-

பவானி: ஈரோடு மாவட்­டம், பவானி­யில் நடி­கர் வையா­புரி தொடங்கி வைத்த இட்லி உண்­ணும் போட்­டி­யில் ஏராளமானோர் ஆர்­வத்­து­டன் பங்­கேற்று இட்­லியை சுடச்­சுட சாப்­பிட்டு பரி­சுத்­தொ­கையை வென்­ற­னர்.

'வெண்ணிலா கபடிக் குழு' படத்­தில் சூரி பரோட்டா சாப்­பிட்டு அசத்­து­வது போல், இட்லி சாப்­பி­டும் போட்டி பவானியில் நடத்­தப்­பட்­டது. ஒவ்­வொரு போட்­டி­யா­ளர்­களுக்­கும் 10 நிமி­டம் மட்­டுமே சாப்­பிட அனு­மதி தரப்­பட்­டது. அதன்­பி­றகு 5 நிமி­டங்­களுக்கு வாந்தி எடுக்­கக்­கூ­டாது என்றும் நிபந்­த­னை­ கூறப்பட்டது.

குமா­ர­பா­ளை­யத்­தைச் சேர்ந்த விசைத்­தறி தொழி­லாளி ராம­லிங்­கம் 19 இட்­லி­களும் கல்­லூரி மாண­வர் ரவி 18 இட்­லி­களும் மளிகைக் கடை வியா­பாரி வில்­லி­யம்ஸ் 15 இட்லிகளும் சாப்­பிட்டு முதல் பரி­சான ரூ.5,000, இரண்டாம் பரி­சான ரூ.3,000, மூன்றாம் பரி­சான ரூ.2,000ஐ வென்­ற­னர். துரித உண வுக்கு மாற்­றாக உட­லுக்கு நன்மை பயக்­கும் இட்லி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்போட்டி நடத்தப்பட்டது.