வீட்டின் மீது பாறை உருண்டு விழுந்ததில் தாய் -மகள் பலி

வீட்டின் மீது பாறை உருண்டு விழுந்ததில் தாய் -மகள் பலி

1 mins read
6a050d97-7db5-43d8-81c2-a75b717a8c79
ராட்சத பாறை ஒரு வீட்டின் மீது உருண்டு விழுந்ததில் தாயும் மகளும் கொல்லப்பட்டனர். மீட்புப் பணி தொடர்கிறது. படங்கள்: ஊடகம் -
multi-img1 of 3

வேலூர்: வேலூர் பகு­தி­யில் தொடர்ந்து பெய்து வரும் வட­கிழக்­குப் பரு­வ­மழை கார­ண­மாக, 50 அடி உய­ரத்­தில் இருந்து ராட்­சத பாறை ஒன்று மலை­யடி வாரத்­தில் உள்ள வீட்­டின் மீது உருண்டு விழுந்­த­தில் தாயும் மகளும் கொல்­லப்­பட்­ட­னர்.

மேலும் ஒரு­வ­ரைத் தேடும் பணி­ தொடர்­கிறது.

இந்­தப் பாறை­யின் எடை 40 டன்­னுக்­கும் அதி­க­மாக இருக்க லாம் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

வேலூர் மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கம் அரு­கில் உள்ள மலைப்­ப­கு­தி­யில் உள்ள ராட்­சத பாறை ஒன்று மலை­ய­டி­வா­ரத்­தில் வசித்து வரும் பிச்­சாண்டி என்­ப­வ­ரின் வீட்­டின் மீது உருண்டு வந்து விழுந்­த­தில் வீட்­டில் இருந்த மூவர் இடி­பா­டு­களில் சிக்­கி­னர்.

இவர்­க­ளது அல­றல் சத்­தம் கேட்டு அக்­கம்­பக்­கத்­தி­னர் ஓடி வந்து மீட்க முயன்­ற­னர். ஆனால், அவர்­க­ளால் முடி­யா­த­தால் தீய­ணைப்­புத் துறை­யி­ன­ருக்கு தக­வல் தெரி­வித்­த­னர்.

இடி­பா­டு­களில் சிக்கி காய மடைந்த பிச்­சாண்­டி­யின் மனைவி ரம­ணியை, 45, முத­லில் மீட்டு மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு சென்­ற­னர். ஆனால், செல்­லும் வழி­யி­லேயே அவர் உயி­ரி­ழந்­தார்.

இத­னை­ய­டுத்து 9 மணி­நேர தேட­லுக்­குப் பிறகு ரமணி அம்­மா­ளின் மகள் நிஷாந்தி, 24, சட­லம் மீட்­கப்­பட்­டது. காவல் துறை­யி­ன­ரும் தீய­ணைப்­புத் துறை­யி­ன­ரும் பொது­மக்­கள் உத­வி­யு­டன் இரு­வ­ரை­யும் மீட்­ட­னர்.