அமைச்சர்: 50 லட்சம் பேருக்கு வீடு தேடிச் சென்று தடுப்பூசி

அமைச்சர்: 50 லட்சம் பேருக்கு வீடு தேடிச் சென்று தடுப்பூசி

1 mins read
39fafd51-d437-4951-913f-475806f99d52
-

சென்னை: தமி­ழ­கத்­தில் இன்­னும் இரண்­டாம் தவணை கொவிட்-19 தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ளா­மல் 50 லட்­சம் பேர் உள்­ள­னர். அவர்­க­ளின் வீடு­க­ளுக்கே சென்று தடுப்­பூசி போடும் பணி நேற்­றில் இருந்து தொடர்ந்து நடந்து வரு­கிறது என்று மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் செய்­தி­யா­ளர் களி­டம் அமைச்­சர் பேசி­ய­போது, "தமி­ழ­கத்­தில் முதல் தவணை தடுப்­பூ­சியை 73 விழுக்­காட்­டி­ன­ரும் இரண்­டா­வது தவணை தடுப்­பூ­சியை 35 விழுக்­காட்­டி­ன­ரும் போட்­டுள்­ள­னர்.

"இரண்­டா­வது தவணை தடுப் பூசி­யைப் போட்­டுக்­கொள்­வ­தற்­கான கால அவ­கா­சம் முடி­வ­டைந்த பின்­ன­ரும் இன்­னும் 50 லட்­சம் பேர் இந்த தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ளா­மல் உள்­ள­னர். அவர்­க­ளின் வீடு­க­ளுக்கே சென்று தடுப்­பூசி போடும் பணி ேநற்று முதல் துரி­த­மாக நடந்து வரு­கிறது.

"தமி­ழ­கத்­தில் 5,000 இடங்­களில் மருத்­துவ முகாம்­கள் ெதாடர்ந்து நடந்து வரு­கின்­றன. இது­வரை ஏழரை லட்­சம் பேர் மழைக்­கால நோய்­க­ளுக்­காக சிகிச்சை பெற்­றுள்­ள­னர்," என்று கூறி­னார்.

இதற்­கி­டையே, தமி­ழ­கத்­திற்கு இது­வரை இல்­லாத அள­வில் ஒரே நாளில் 53.43 லட்­சம் 'கொவி­ஷீல்ட்' தடுப்­பூ­சி­கள் வந்­துள்­ள­தா­க­வும் தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

தற்­போது மாநில அர­சி­டம் 1.25 கோடி தடுப்­பூ­சி­கள் கையி­ருப்­பில் உள்ள நிலை­யில், இம்­மாத இறு­திக்­குள் 100% முதல் தவணை தடுப்­பூசி செலுத்­திய மாநி­லம் என்ற இலக்கை நோக்கி தமி­ழக அரசு சென்று கொண்­டி­ருப்­ப­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­தார்.