சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த ஆடவருக்கு சாகும் வரை சிறை

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த ஆடவருக்கு சாகும் வரை சிறை

1 mins read
36c2f320-2605-44d9-82ac-0df2a76c4e98
மாத­வன். படம்: ஊடகம் -

புதுக்­கோட்டை: விரா­லி­ம­லை­யில் 12 வயது சிறு­மி­யைப் பாலி­யல் வன்­கொ­டுமை செய்த ஆட­வ­ருக்கு அவர் சாகும் வரை ஆயுள் தண்­டனை விதித்து புதுக்­கோட்டை மக­ளிர் நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

திருச்சி மாவட்­டம், பிச்­சாண்­டார் கோவில் பகு­தி­யைச் சேர்ந்­த­வ­ரான மாத­வன், 27, விரா­லி­ம­லை­யில் கூலி வேலை பார்த்து வந்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், புதுக்­கோட்டை மாவட்­டம், விரா­லி­ம­லை­யில் வீட்­டில் தனி­யாக இருந்த 12 வயது மாண­வியை மாத­வன் அடித்து, தாக்கி பாலி­யல் வன்­கொ­டுமை செய்­துள்­ளார். கடந்த ஜூன் மாதம் இந்­தச் சம்­ப­வம் நடந்­துள்­ளது.

சிறு­மி­யின் பெற்­றோர் அளித்த புகாரை அடுத்து, கீர­னூர் அனைத்து மக­ளிர் போலி­சார் மாத­வ­னைக் கைது செய்­த­னர்.

புதுக்­கோட்டை மக­ளிர் நீதி­மன்­றத்­தில் இந்த வழக்கு நடந்து வந்த நிலை­யில், நீதி­பதி முனை­வர் சத்யா அதி­ரடி தீர்ப்­ப­ளித்­துள்­ளார்.

"வீட்­டிற்­குள் அத்­து­மீறி நுழைந்து சிறு­மி­யைத் தாக்கி பாலி­யல் வன்­கொ­டுமை செய்த மாத­வ­னுக்கு இயற்கை மர­ணம் ஏற்­படும் வரை ஆயுள் தண்­ட­னை­யும் சிறு­மியை தாக்­கி­ய­தற்­காக 10 ஆண்டு கடுங்­கா­வல் தண்­ட­னை­யும் 50 ஆயி­ரம் ரூபாய் அப­ரா­த­மும் விதித்து உத்­த­ர­விட்­டார். அப­ரா­தத்­தைக் கட்­டத் தவ­றி­னால் மேலும் ஓர் ஆண்­டு­கா­லம் கடுங்­கா­வல் தண்ட னையும் விதித்து தீர்ப்­ப­ளித்­தார்.

தமி­ழக அரசு பாதிக்­கப்­பட்ட சிறு­மிக்கு ரூ.4 லட்­சம் இழப்­பீடு வழங்­க­வேண்­டும் என்­றும் அவர் உத்­த­ர­விட்­டார். இச்­சம்­ப­வம் நடந்த நான்கு மாதங்­க­ளுக்­குள் விசா­ர­ணையை முடித்து குற்ற வாளிக்கு தண்­டனை அளிக்­கப்­பட்­டுள்­ளது.