68,652 ஏக்கர் விளைநிலம் பாதிப்பு; நிவாரணம் அறிவிப்பு

68,652 ஏக்கர் விளைநிலம் பாதிப்பு; நிவாரணம் அறிவிப்பு

2 mins read
cf84599f-e0f5-4e7d-9460-2e6b6078c8df
தஞ்சை மாவட்டத்தில் திங்கள் இரவு முதல் மீண்டும் பெய்த தொடர் மழையால் கோணக்கடுங்கலாறு கரை உடைந்து ஏறத்தாழ 1,500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. ஐம்பதுமேல் நகரம் கிராமத்தில் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை எடுத்துக்காட்டும் விவசாயிகள். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: வட­கி­ழக்­குப் பரு­வ­மழை யால் கடந்த 11ஆம் தேதி முதல் தமி­ழ­கத்­தின் பெரும்­பா­லான மாவட்­டங்­கள் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டன. விளை­ப­யிர்­கள் நீரில் மூழ்­கின.

மழை­யால் சேத­ம­டைந்த பயிர்­களுக்கு உரிய இழப்­பீடு வழங்க வேண்­டும் என விவ­சா­யி­களும் பல்­வேறு கட்­சி­யி­ன­ரும் தமி­ழக அர­சுக்­குக் கோரிக்கை விடுத்­த­னர்.

இந்­நி­லை­யில், டெல்டா மாவட்­டங்­களில் ஏற்­பட்ட பயிர் சேதம், கால்­நடை இறப்பு, வீடுகள் சேதம் குறித்து கடந்த ஒருவார­மாக கூட்­டு­ற­வுத்­துறை அமைச்­சர் ஐ.பெரிய­சாமி தலைமையில் ஆய்வு செய்து வந்த அமைச்­சர்­கள் குழு­வி­னர், நேற்று அந்த அறிக்கையை முதல்­வர் மு.க.ஸ்டா­லி­னி­டம் அளித்­த­னர்.

அறிக்கையில், தஞ்­சா­வூர், திரு­வா­ரூர், நாகை, மயி­லா­டு­துறை உள்­ளிட்ட டெல்டா மாவட்­டங்­களில் 17 லட்­சத்து 46,000 ஏக்­கர் நிலத்தில் சம்பா பயிர்கள் சாகு­படி செய்யப்பட்டி­ருந்த நிலை­யில், ஏறக்­குறைய 68,652 ஏக்­கர் விளை­நி­லங்­கள் வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதைத்தொடர்ந்து, அறு­வ­டைக்கு தயா­ரான நிலையில், சேத­ம­டைந்த பயிர்­க­ளுக்கு ஏக்கருக்கு ரூ.20,000 நிவா­ர­ணம் வழங்­கப்­படும் என்­றும் சம்பா பரு­வத்­தில் சாகு­படி செய்து மூழ்­கிய பயிர்­க­ளுக்கு ஏக்க­ருக்கு ரூ.6,038 மதிப்­புள்ள இடு­பொ­ருள்கள் வழங்­கப்­படும் என்­றும் முதல்­வர் அறி­வித்­துள்­ளார்.

தமி­ழ­கத்தில் மழைநீா் வடி­கால் கட்­ட­மைப்பை உரு­வாக்கி, நீா் ஆதா­ரங்­கள் பெருக்­கப்­படும் என்றும் முதல்வர் கூறினார்.

சென்­னை­யில் மழைநீா் தேங்கு­வ­தைத் தடுக்­கும் வகை­யில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதி­காரி திருப்­பு­கழ் தலை­மை­யில் ஆலோ­ச­னைக் குழு ஒன்று உரு­வாக்­கப்­பட்டு அதற்­கான அர­சா­ணை­யை­யும் அரசு வெளி­யிட்­டுள்­ளது.

"வட­கி­ழக்­குப் பரு­வ­ம­ழையை எதிா்கொள்­ளும் வித­மாக அரசு முன்­னெச்சரிக்கை நடவடிக்கை களை எடுக்காத­தால்­தான் மக்­கள் வெள்­ளப் பாதிப்­புக்கு ஆளாகி வரு­கின்­றனா்," என எதிா்க்­கட்­சித் தலைவா் கே.பழ­னி­சாமி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.