இந்தியாவிலேயே முதல்முறையாக தஞ்சையில் ரூ.1 கோடியில் உணவு அருங்காட்சியகம்

இந்தியாவிலேயே முதல்முறையாக தஞ்சையில் ரூ.1 கோடியில் உணவு அருங்காட்சியகம்

1 mins read
f0704d53-8b59-480d-8bf4-9304443f2418
உணவு அருங்காட்சி யகத்தின் ஒரு பகுதியில் இப்படி மெழுகுச் சிலைகளை வடித்துள்ளனர். காலை 11 முதல் மாலை 5 மணிவரை மக்கள் இதை இலவசமாகப் பார்வையிடலாம்.படம்: தமிழக ஊடகம் -

தஞ்­சா­வூர்: 'தமிழ்­நாட்­டின் நெற்­களஞ்­சி­யம்' என்று அழைக்­கப் படும் தஞ்­சா­வூர் மாவட்­டத்­தில் இந்­தி­யா­வி­லேயே முதன்­மு­றை­யாக ரூ.1 கோடியே 10 லட்­சம் ரூபாய் செல­வில் உணவு அருங்­காட்­சி­ய­கம் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த அருங்­காட்­சி­ய­கத்தை மும்­பை­யில் இருந்­த­படி காணொளி காட்சி வழி மத்­திய அமைச்­சர் பியூஷ் கோயல் திறந்­து­வைத்­தார்.

தஞ்சை-புதுக்­கோட்டை சாலை யில் குழந்தை இயேசு கோவில் அருகே திறக்­கப்­பட்­டுள்ள உணவு அருங்­காட்­சி­ய­கத்தை ஏரா­ள­மான மக்­கள் அதிக ஆர்­வத்­து­டன் பார்­வை­யிட்டு வரு­கின்­ற­னர்.

நெல் நாற்று விடப்படு­வது முதல் அரி­சி­யாக அது ­மக்­க­ளுக்கு கிடைப்­பது வரை­யி­லான காட்சிகளை மெழுகு, மரப்­பொருள்­க­ளைக் கொண்டு காட்சிப்படுத்தி இருந்தது பல­ரை­யும் கவர்ந்­தது.

இந்­திய உண­வுக் கழ­க­மும் பெங்­க­ளூ­ரு­வில் உள்ள விஸ்­வேஸ்­வ­ரய்யா தொழில்­நுட்ப அருங்­காட்­சி­ய­க­மும் இணைந்து 1,890 சதுர அடி பரப்­ப­ள­வில் இந்த உணவு அருங்­காட்­சி­ய­கத்தை உரு­வாக்கி உள்­ளன.

இந்த அருங்­காட்­சி­ய­கத்­தில் பழங்காலம் முதல் இப்­போது வரை­யி­லான ஒவ்­வொரு கால­கட்­டத்­தி­லும் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்த உழ­வுக் கரு­வி­கள், விவ­சா­யம், பருப்பு வகை­கள், காய்­க­றி­கள், பழங்­கள், இந்­தி­ய உணவு முறை­கள், மக்­க­ளின் பழக்­க­வ­ழக்­கங்­கள், தொழில், நீர்­நி­லை­களில் நீரா­டு­தல் போன்­ற வற்றை மெழுகு பொம்மைகளாக நினைவு கூர்ந்துள்ளனர்.

பழங்­கால மனி­தர்­கள் வேட்­டை­யின்போது ஆயு­தங்­க­ளா­கப் பயன்­ப­டுத்­திய கற்­களும் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன.