17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை: மருத்துவர் கைது

கரூர்: பள்ளி மாண­விக்கு பாலி­யல் தொல்லை கொடுத்­தது தொடர்­பான புகா­ரின் பேரில் கரூ­ரைச் சேர்ந்த மருத்­து­வர் ரஜி­னி­காந்த் (படம்) கைதாகி உள்­ளார்.

தலை­ம­றை­வாக இருந்த அவரை நேற்று முன்­தி­னம் தனிப்­படை போலி­சார் கைது செய்­த­னர்.

எலும்பு முறிவு சிகிச்சை நிபு­ண­ரான ரஜி­னி­காந்த், தனது மருத்­து­வ­ம­னை­யில் காசா­ள­ரா­கப் பணி­யாற்றி வரும் பெண்­ணின் 17 வயது மகளை பாலி­யல் சீண்­ட­லுக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளார்.

மருத்­து­வ­மனை மேலா­ளர் சரவ­ணன் இதற்கு உடந்­தை­யாக இருந்­தது தெரி­ய­வந்­ததை அடுத்து அவ­ரை­யும் காவல்­துறை கைது செய்­துள்­ளது.

சில தினங்­க­ளுக்கு முன்­னர் மேலா­ளர் சர­வ­ணன் மூலம் 11ஆம் வகுப்பு படிக்­கும் அந்த மாண­வியை மருத்­து­வ­ம­னை­யில் உள்ள தமது அறைக்கு வர­வ­ழைத்­துள்­ளார் ரஜி­னி­காந்த். அதன் பிறகு தமது பாலி­யல் சீண்­டல் நட­வ­டிக்­கையை அரங்­கேற்றி உள்­ளார்.

இது தொடர்­பாக சிறு­மி­யின் தாயார் கரூர் காவல்­து­றை­யில் புகார் அளித்­த­தன் பேரில், மேலா­ளர் சர­வ­ணன் முத­லில் சிக்­கி­னார். மருத்­து­வர் ரஜி­னி­காந்த் தலை­ம­றை­வா­னார்.

இதை­ய­டுத்து, தனிப்­படை அமைக்­கப்­பட்டு தேடு­தல் வேட்டை நடை­பெற்­றது.

நேற்று முன்­தி­னம் இரவு ரஜினி­காந்தை போலி­சார் கைது செய்­த­னர்.

மருத்­து­வர், மேலா­ளர் மீது போக்சோ சட்­டத்­தின் கீழ் வழக்குப் பதி­வாகி உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!