கிணற்றில் விழுந்த கார்; தந்தை, மகள் பலி

கிணற்றில் விழுந்த கார்; தந்தை, மகள் பலி

1 mins read
5acb5254-6770-47b4-aeef-d50011587b52
கிணற்றில் விழுந்த கார் சுமார் ஐந்து மணி நேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்டது. படம்: ஊடகம் -

சேலம்: சேலத்­தைச் சேர்ந்த 40 வய­தான வீரன் என்பவர் பெங்­க­ளூ­ரில் உள்ள தனி­யார் நிறு­வ­னத்­தில் பணி­யாற்றி வந்­தார். சில தினங்­க­ளுக்கு முன்பு மனைவி உமா (35 வயது), மகள் சுஷ்­மிதா (13 வயது) ஆகி­யோ­ரு­டன் விடு­மு­றைக்­காக சொந்த ஊர் வந்­தி­ருந்­தார்.

நேற்று முன்­தி­னம் மூவ­ரும் மீண்­டும் பெங்­க­ளூ­ருக்கு காரில் திரும்­பிக் கொண்­டி­ருந்­த­னர். அப்­போது பொன்­னேரி அருகே திடீ­ரென கட்­டுப்­பாட்டை இழந்த கார், தாறு­மா­றாக ஓடி, சாலை­யோர விவ­சாய நிலத்­தில் உள்ள கிணற்­றில் விழுந்­தது.

அச்­ச­ம­யம் காரின் கதவு திறந்து கொண்­ட­தால் வீர­னின் மனைவி உமா மட்­டும் வெளியே தூக்கி வீசப்­பட்­டார். வீர­னும் அவ­ரது மகளும் காரில் இருந்து வெளி­யேற முடி­யா­மல் நீரில் மூழ்கி உயி­ரி­ழந்­த­னர். உமா மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கி­றார்.