முன் பிணை கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மதுரை: ஆவின் நிறு­வ­னத்­தில் வேலை வாங்­கித் தரு­வ­தா­கக்­கூறி ரூ.3 கோடிக்கு மேல் மோசடி செய்து­விட்­ட­தாக அதி­முக முன்­னாள் அமைச்­சர் கே.டி. ராஜேந்­திர பாலாஜி (படம்) மீது காவல்துறை­யி­னர் வழக்­குப் பதிந்துள்­ள­னர்.

ராஜேந்­திர பாலாஜி மீது இரு­வர் அளித்த புகா­ரின் அடிப்­ப­டை­யில் விரு­து­ந­கர் மாவட்ட குற்­றப்­பி­ரிவு காவல்­து­றை­யி­னர் வழக்­குப்­பதிந்துள்ளதை அடுத்து, முன் பிணை கோரி ராஜேந்­திர பாலாஜி உயர் நீதி­மன்ற மது­ரைக் கிளை­யில் மனுத்­தாக்­கல் செய்­துள்­ளார்.

அரசு வேலை வாங்­கித்­த­ருவ தாகக் கூறி ரூ.30 லட்சத்தை மோசடி செய்­து­விட்­ட­தாக விருது நகர் மாவட்­டம், சாத்­தூ­ரைச் சேர்ந்த ரவீந்­தி­ரன் என்­ப­வர் விரு­து­ந­கர் குற்­றப்­பி­ரிவு காவல் நிலை­யத்­தில் புகார் மனு அளித்­தி­ருந்­தார்.

விசா­ர­ணை­யில், ராஜேந்­திர பாலாஜி, அதி­முக ஒன்­றி­யச் செய­லா­ளர் விஜ­ய­நல்­லத்­தம்பி, அதி­முக உறுப்­பி­னர் மாரி­யப்­பன் ஆகிய மூவருக்­கும் இந்­தப் புகா­ரில் தொடர்­பி­ருப்­பது தெரிய வந்தது.

இந்­நி­லை­யில், ராஜேந்­திர பாலாஜி நீதிமன்றத்தில் தாக்­கல் செய்­துள்ள மனுவில், "எனது பெய­ருக்குக் களங்­கம் விளை­விக்­கும் வகை­யில் புகார் அளிக்­கப்­பட்­டுள்­ளது. புகார் அளித்­த­வர் மீது எட்­டுக்­கும் மேற்­பட்ட குற்­ற­வி­யல் வழக்­கு­கள் நிலு­வை­யில் உள்ளது. இந்த வழக்­கில் கைது செய்­யப்­படுவதற்­கான வாய்ப்பு இருப்­ப­தால் முன் பிணை வழங்கவேண்­டும்," எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!