நடிகர் சூர்யா வீட்டுக்கு மூன்றாவது நாளாக போலிஸ் பாதுகாப்பு

சென்னை: தியா­க­ரா­ய­ந­கர் ஆற்­காடு சாலை­யில் உள்ள நடி­கர் சூர்­யா­வின் வீட்­டுக்கு கடந்த மூன்று நாள்களாக துப்­பாக்கி ஏந்­திய போலி­ஸ் பாது­காப்­பு போடப்பட்டுள்ளது.

சூர்­யா­வுக்கு தனிப்­பட்ட முறை­யில் துப்­பாக்­கி­யு­டன் இரண்டு போலிசார் பாது­காப்பு அளித்து வருகின்றனர். அவர் வெளி­யில் செல்­லும்போது போலி­சா­ரும் கூடவே சென்று வரு­கின்றனர்.

அவரது வீட்டின் பாது­காப்­புக்­காக ஐந்து போலி­சார் நிறுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

நடி­கர் சூர்யா தயா­ரித்து, நடித்­துள்ள 'ஜெய்­பீம்' திரைப்­ப­டம் சர்ச்­சை­யில் சிக்கி உள்­ளது. பாட்­டாளி மக்­கள் கட்­சி­யின் சார்­பில் அந்தப் படத்­துக்கு எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதை­யொட்டி நடி­கர் சூர்­யா­வுக்குத் தொடர்ந்து மிரட்­டல்­கள் வந்தன. அத்துடன், அவர் மன்­னிப்பு கேட்­க­வேண்­டும் என்று வன்­னி­யர் சங்­கத்­தின் சார்­பில் வழக்­க­றி­ஞர் நோட்­டீசும் அனுப்­பப்­பட்­டுள்­ளது.

இத­னால், நடி­கர் சூர்­யா­வின் வீட்­டுக்குத் துப்­பாக்கி ஏந்­திய போலிஸ் பாது­காப்புப் போட தமிழ் நாடு காவல் ஆணையர் சங்­கர்­ஜிவால் உத்­த­ர­விட்­டார்.

இதற்­கி­டையே, "நடி­கர் சூர்­யாவை மிரட்­டு­வது என்­பது ஏற்றுக் கொள்ள முடி­யா­தது," என அமைச்­சர் மனோ தங்­க­ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!