தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

100% நிரம்பிய 806 ஏரிகள்

1 mins read
898a3b2c-c1ec-4f84-af00-3ed8bd0b6d05
-

காஞ்­சி­பு­ரம்: வட­கி­ழக்கு பரு­வ­மழை கார­ண­மாக தமிழ்­நாட்­டின் பல மாவட்­டங்­க­ளி­லும் பர­வ­லாக மழை பெய்து வரு­கிறது.

இத­னால், சென்னை, காஞ்சி புரம், செங்­கல்­பட்டு, திரு­வண்ணா மலை ஆகிய நான்கு மாவட்­டங்­களிலும் மொத்­தம் உள்ள 1,022 ஏரி­களில் 806 ஏரி­கள் 100% நிரம்­பி­யுள்­ள­தாக தமிழ்­நாடு பொதுப்­பணித் துறை தெரி­வித்­துள்­ளது.

179 ஏரி­கள் 75% அளவுக்கும் 47 ஏரி­கள் 50% அள­வுக்­கும் நிரம்பி­யுள்­ள­தா­க பாலாறு பொதுப் பணித் துறை அதி­கா­ரி­கள் கூறியுள்ளனர்.

காஞ்­சி­பு­ரம் மாவட்­டத்­தில் 267 ஏரி­களும் செங்­கல்­பட்­டில் 444 ஏரி­களும் திரு­வண்­ணா­மலை மாவட்­டத்­தில் 76 ஏரி­களும் சென்­னை­யில் 16 ஏரி­களும் அதன் முழு கொள்­ள­ளவை எட்­டி­யுள்­ளன.

அபாய எச்­ச­ரிக்கை

இதற்­கி­டையே, முல்­லைப் பெரி­யாறு அணை­யின் நீர்­மட்­டம் 141 அடியை எட்­டியுள்ள­தால், கரை­யோ ரம் வசிப்பவர்களைப் பாது­காப்­பான இடங்­க­ளுக்குச் செல்­லும்­படி இரண்­டாம் கட்ட வெள்ள அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.