சென்னை: தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரி களுக்கு முதல்வர்கள் நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கல்லூரிகளில் பணியாற்றிய பேராசிரியர்கள் பலர் பதவி உயர்வு மூலம் முதல்வர் பதவிக்கு உயர்ந்துள்ளனர்.
இது குறித்து உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.கார்த்திகேயன் அரசாணை ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில், வேலூர், அரியலூர், ஆலங்குளம், ஓசூர், கூடலூர், ராமேஸ்வரம், கடலூர், கோவை, மாதனூர், பர்கூர், மணல்மேடு, கொடைக்கானல், விருதுநகர், அவினாசி, விழுப்புரம் (வானூர்), கோவில்பட்டி, கரூர் (தரங்கம்பட்டி), சங்கரன்கோவில், பெரம்பலூர், சத்தியமங்கலம், காங்கேயம், குடவாசல், ஆண்டிப்பட்டி, பெரும்பாக்கம், குமாரபாளையம், பல்லடம், நாகப்பட்டினம், தேனி (கோட்டூர்), மேட்டுப்பாளையம், சீர்காழி, ஒரத்தநாடு, கடலாடி, வால்பாறை, நாகர்கோவில் ஆகிய இடங்களில் உள்ள 34 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

