சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக செயல்பட்டு வந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அதிபர் பிறப்பித்து உள்ளார். திரு முனீஸ்வர்நாத் பண்டாரி பதவி ஏற்கும் வரை சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

