தொடர் மழையால் சோகம்; வீடு இடிந்து விழுந்ததில் ஒன்பது பேர் மரணம்

தமிழகத்தின் வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் கனமழையின் காரணமாக 50 ஆண்டுகள் பழமையான வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் சிறுவர்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் இன்று காலை நிகழ்ந்தது.

தரைமட்டமான அந்த வீட்டில் 18 பேர் தங்கியிருததாக தகவல் வெளியானதை அடுத்து காவல், தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினர் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர். பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், பேரணாம்பட்டுக்கு சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினார். பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார்.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!