அமைச்சர்: ஐந்து மாவட்டங்களில் டெங்கிக் காய்ச்சல் அதிகரிப்பு

அமைச்சர்: ஐந்து மாவட்டங்களில் டெங்கிக் காய்ச்சல் அதிகரிப்பு

2 mins read
ced42b47-f222-4101-9d40-a0f363dc252d
-

சென்னை: தமி­ழ­கத்­தில் டெங்கி பாதிப்பு ஐந்து மாவட்­டங்­களில் மட்­டும் அதி­க­ரித்­துள்­ள­தாக மருத்­து­வம், மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

காஞ்­சி­பு­ரம், கட­லூர், விழுப்­பு­ரம், சேலம், கன்­னி­யா­கு­மரி ஆகிய ஐந்து மாவட்­டங்­களில் அதிக அள­வில் டெங்­கிக் காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர்.

நேற்று முன்­தி­னம் வரை 450 பேர் இந்­தக் காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில், இப்­போது டெங்கி பாதிப்­பால் 532 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று அமைச்­சர் மேலும் தெரி­வித்­தார்.

மழை வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் தொடா் மருத்­துவ முகாம்­கள் நடத்­தப்­பட்டு, அங்கு காய்ச்­சல், வயிற்­றுப்­போக்கு, டெங்­கிக் காய்ச்­சல், மஞ்­சள் காமாலை, பன்­றிக் காய்ச்­சல், எலிக் காய்ச்­சல், டைபாய்டு உள்­ளிட்ட மழைக்­கால நோய்­க­ளால் பாதிக்­கப்­பட்­டுள்­ளோ­ரைக் கண்­ட­றிந்து, அவா்க­ளுக்­குத் தேவை­யான சிகிச்­சை­களை அளிக்க­வேண்­டும் என­வும் அவர் சுகா­தார அதி­கா­ரி­க­ளி­டம் வலி­யுறுத் தினார்.

"50,000 இடங்­களில் கடந்த வியா­ழ­னன்று நடத்­தப்­பட்ட மெகா தடுப்­பூசி முகாம்­கள் மூலம் 836,796 பேருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது. அவர்­களில் 336,468 பேர் முதல் தவணை தடுப்­பூ­சி­யும் 500,328 பேர் இரண்­டாம் தவணை தடுப்­பூ­சி­யும் போட்­டுக்கொண்­டுள்­ள­னர்," என்று சென்­னை­யில் டிஎம்­எஸ் வளா­கத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­போது மா. சுப்­பி­ர­ம­ணி­யன் கூறி­னார்.

தொடர்ந்து பேசிய அவர், தமி­ழ­கத்­தில் இது­வரை 6 கோடியே 43 லட்­சத்து 91 ஆயி­ரத்து 902 பேர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர். தற்­போது ஒரு கோடிக்­கும் அதிகமான தடுப்­பூசி கையி­ருப்­பில் உள்­ளது என்­றார்.

இதற்­கி­டையே, மாநி­லம் முழு­வ­தும் மழை வெள்­ளம் சூழ்ந்த இடங்­களில் தொற்றுநோய் பர­வாமல் தடுக்க தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்கவேண்­டும் என அனைத்து மாவட்ட ஆட்­சி­யா்­களுக்­கும் மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை முதன்­மைச் செய­லாளா் ஜெ.ராதா­கிருஷ்­ணன் அறி­வுரை வழங்­கி­யுள்ளாா்.