மழைக்கு தஞ்சம் புகுந்த 9 பேர் வீடு இடிந்து விழுந்து உயிரிழப்பு

மழைக்கு தஞ்சம் புகுந்த 9 பேர் வீடு இடிந்து விழுந்து உயிரிழப்பு

2 mins read
943d5b3c-d4d3-4275-a360-71be43a81c28
இடிந்து விழுந்து தரைமட்டமான மாடி வீட்டில் சிக்கி மாண்டவர்களின் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபடும் மக்கள்.படம்: தமிழக ஊடகம் -

வேலூர்: கடந்த பத்து நாள்­க­ளுக்­கும் மேலாக வேலூர் மாவட்­டத்­தில் தொடர்ந்து கன­மழை பெய்து வரு­கிறது. இந்த மழை பாதிப்­பில் இருந்து பாது­காப்­பாக இருப்­ப­தற்­காக அடைக்­க­லம் நாடிச் சென்ற ஒன்­பது பேர், அவர்­கள் தங்­கி­யி­ருந்த மாடி வீடு இடிந்து விழுந்­த­தில் தூக்­கத்­தி­லேயே உயி­ரி­ழந்­த­னர்.

வேலூர் மாவட்­டம், பேர­ணாம் பட்­டில் உள்ள மசூதி தெரு­வில் வசித்து வரும் ஒரு குடும்­பத்­தி­னர் கன­மழை, காட்­டாற்று வெள்­ளம் கார­ண­மாக பாது­காப்­பிற்­காக தாங்­கள் எப்­போ­தும் போல் வழக்க மாகத் தங்­கும் பர்­கூஸ் என்­ப­வ­ரது வீட்­டுக்­குச் சென்று தங்­கி­யுள்­ள­னர்.

மொத்­த­மாக நேற்று முன்­தி­னம் இரவு இரண்டு குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 18 பேர் அந்த வீட்­டில் படுத்­து­றங்­கிய நிலை­யில், நேற்று காலை 6.30 மணி­ய­ள­வில் அனீஷா பேகத்­தின், 63, வீடு சரிந்து விழுந்து தரை­மட்­ட­மா­னது.

இந்த விபத்­தின்­போது அயர்ந்து தூங்­கிக்கொண்­டி­ருந்த நான்கு குழந்­தை­கள், பெண்­கள் உள்ளிட்ட ஒன்பது பேர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­த­னர். அங்­கி­ருந்து காயத்­து­டன் மீட்­கப்­பட்ட ஒன்­பது பேர் பேர­ணாம்­பட்டு, வேலூர் அரசு மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்டு உள்­ள­னர்.

சம்­பவ இடத்தை வேலூர் மாவட்ட ஆட்­சி­யர் கும­ர­வேல் பாண்­டி­யன் பார்­வை­யிட்­டார்.

நக­ராட்சி நிர்­வா­கம், வரு­வாய்த்­துறை, காவல்­து­றை­யி­னர் மீட்­புப்­ப­ணி­யில் ஈடு­பட்­ட­னர். பொக்­லைன் இயந்­தி­ரம் மூலம் இடிபாடுகள் அகற்­றப்­பட்டு சட­லங்­கள் மீட்­கப்­பட்­டன.

கன­மழையால் உயிர்ச்­சேதம் ஏதும் பெரி­ய­ள­வில் எற்­ப­டா­மல் இருந்து வந்த நிலை­யில், இந்தச் சம்­ப­வம் அங்­குள்ள மக்­களைப் பெரும் அதிர்ச்­சி­யில் ஆழ்த்­தி­யுள்­ளது.

விபத்­தில் உயி­ரி­ழந்த ஒன்பது பேரின் குடும்­பங்­க­ளுக்­கும் தலா ரூ.5 லட்­சம் நிவா­ர­ணம் அறி­வித்­துள்­ளது தமிழக அரசு.