சென்னை பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை

சென்னை: பதி­வா­ளர் அலு­வ­ல­கத்­தில் லஞ்ச ஒழிப்­புப் போலி­சார் மேற்­கொண்ட அதி­ரடி சோத­னை­யின்­போது பல லட்­சம் ரொக்­கப் பண­மும் முக்­கிய ஆவ­ணங்­களும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

மாநி­லம் முழு­வ­தும் உள்ள பத்­தி­ரப்­ப­திவு அலு­வ­ல­கங்­களில் லஞ்­சம் தலை­வி­ரித்­தா­டு­வ­தாக பல ஆண்டு­க­ளாக புகார் எழுந்து வரு­கிறது. இதை­ய­டுத்து அவ்­வப்­போது பதி­வா­ளர் அலு­வ­ல­கங்­களில் காவல்­துறை சோதனை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது வழக்­க­மாக உள்ளது.

இந்­நி­லை­யில், எப்­போ­தும் ஆள் நட­மாட்­டத்­து­டன் பர­ப­ரப்­பா­கக் காணப்­படும் சென்னை சைதாப்­பேட்டை பத்­தி­ரப் பதிவு அலு­வ­லகத்தில் நேற்று முன்­தி­னம் லஞ்ச ஒழிப்­புப் போலி­சார் திடீர் சோதனை நடத்­தி­னர்.

அந்த அலு­வ­ல­கத்­தில் உள்ள அதி­கா­ரி­கள் அதிக அளவில் லஞ்சம் பெறு­வ­தாக கிடைத்த புகார்­களை அடுத்து இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது.

சோத­னை­யின்­போது கணக்­கில் வராத சுமார் நான்கு லட்­சம் ரூபாய் ரொக்­கப் பணம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. எதற்­காக இந்த லஞ்­சம் பெறப்­பட்­டது என்­பது குறித்து முதற்­கட்ட விசா­ரணை மேற்­கொண்ட போலி­சார், சில ஆவ­ணங்­க­ளை­யும் பறி­மு­தல் செய்­த­னர். பின்­னர் தெற்கு மாவட்ட பதி­வா­ளர் மீனா­கு­மாரி உள்­ளிட்ட அதி­கா­ரி­க­ளி­டம் போலி­சார் விசா­ரணை நடத்­தி­னர். சோதனை நட­வ­டிக்கை குறித்த முழு அறிக்­கை­யும் விரை­வில் வெளி­யா­கும் என்­றும் அதன் அடிப்­ப­டை­யில் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­கள் மீது வழக்­குப் பதிவு செய்­யப்­படும் என்­றும் காவல்­துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!