10,000 வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம்; மக்கள் பரிதவிப்பு

கட­லூர்: தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகு­தி­களில் மழை நீடித்து வரும் நிலை­யில், மாநி­லம் முழு­வ­தும் உள்ள குளம், குட்­டை­கள், ஏரி­கள் நிரம்­பி­யுள்­ளன. ஆயி­ரக்­க­ணக்­கான வீடு­களை வெள்­ளம் சூழ்ந்­துள்­ள­தால் மக்­கள் வெளி­யேற முடி­யா­மல் தவிப்­பில் உள்­ள­னர்.

தென்­பெண்ணை ஆற்­றில் ஏற்­பட்­டுள்ள வெள்­ளப்­பெ­ருக்கு கார­ண­மாக கட­லூ­ரில் 10 ஆயி­ரம் வீடு­களை வெள்­ளம் சூழ்ந்­துள்­ளது. அங்கு 15 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் மீட்­கப்­பட்டு பாது­காப்­பான இடங்­களில் தங்க வைக்­கப்­பட்டுள்ள­னர்.

கட­லூர் ஒன்­றி­யத்­துக்­குட்­பட்ட அழ­கி­ய­நத்­தம் முதல் தாழங்­குடா வரை உள்ள நான்காயி­ரம் ஏக்கர் விளை­நி­லங்­கள் வெள்­ளத்­தில் மூழ்­கி­யுள்­ளன. கட­லூர் மாவட்­டம் முழு­வ­துமே இப்­போது வெள்­ளக்­காடாக காட்சி அளிக்­கிறது.

சாத்­த­னூர் அணை­யில் இ­ருந்து வெளி­யேற்­றப்­படும் உபரி­நீ­ரால் தென்­பெண்ணை ஆற்­றில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் ஆற்­றின் இரு­ க­ரை­க­ளை­யும் தொட்­ட­படி தண்­ணீர் பாய்ந்­தோ­டு­வ­தா­க­வும் ஆற்­றின் கீழ்­மட்­டத்­தில் இருந்து 25 அடி உய­ரத்­துக்கு தண்­ணீர் செல்­வ­தா­க­வும் ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இத­னால் கெடி­லம், பர­வனாறு, மணி­முக்தா, கொள்­ளி­டம் ஆறு­களில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டது. கரை­யோர மக்­க­ளுக்கு வெள்ள அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்டது.

720 ஏரி­கள் நிரம்­பின

சுமார் நூறு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு பாலாற்­றில் ஏற்­பட்ட வெள்ளப்­பெ­ருக்­கு கார­ண­மாக காஞ்­சி­பு­ரம் மாவட்­டத்­தில் பெரும்­பா­லான பகுதி­களை வெள்­ளம் சூழ்ந்­துள்­ளது. சாலை­களில் வெள்­ளம் கரை­புரண்டு ஓடு­கிறது.

காஞ்­சி­பு­ரம் வீட்டு வசதி வாரி­யக் குடி­யி­ருப்­பு­களில் மழை­நீர் புகுந்­தது. இத­னால், அங்­கி­ருந்­த­வர்­கள் வேறு இடங்­க­ளுக்­குச் சென்று தங்கி­ உள்­ள­னர்.

காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு, திரு­வண்­ணா­மலை ஆகிய மூன்று மாவட்­டங்­களில் 1,022 ஏரி­கள் உள்ளன. அவற்­றுள் இது­வரை 720 ஏரி­கள் முழு கொள்­ள­ளவை எட்­டி­உள்­ளன.

கடந்த பத்து நாள்­க­ளாக கன­மழை பெய்து வரு­வ­தால் மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

12 கிரா­மங்­க­ளுக்­குள் புகுந்த

வெள்­ள­நீர்

தென்­பெண்ணை ஆற்­றில் ஏற்­பட்ட வெள்­ளத்­தால் கரை உடைந்து போன­தில் திரு­வண்­ணா­மலை மாவட்­டம் பாகூர் பகு­தி­யில் உள்ள 12 கிரா­மங்­களை வெள்­ளம் சூழ்ந்தது. இத­னால் ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட வீடு­க­ளுக்­குள் வெள்­ள­நீர் புகுந்­தது.

அப்­ப­கு­தி­யில் உள்ள பாலங்­கள், தடுப்­ப­ணை­களும் வெள்­ளத்­தில் மூழ்கிவிட்டன.

வெள்ள நீர் வடி­ய­வில்லை

இதற்­கி­டையே மழை ஓய்ந்து 13 நாள்­கள் கடந்­து­விட்ட நிலை­யில், சென்னை புற­ந­கர்ப் பகு­தி­களில் வெள்ள நீர் இன்­னும் முழு­மை­யாக வடி­ய­வில்லை.

இத­னால் அப்­பகுதி­களில் வசிப்­ப­வர்­கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வரு­கின்­ற­னர்.

மூன்று மாவட்டங்களில் 720 ஏரிகள் நிரம்பின; 15 ஆயிரம் பேர் வெளியேற்றம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!