தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இணைய விளையாட்டு: பெற்றோர் கண்டிப்பு; நகை, பணத்துடன் சிறுவன் ஓட்டம்

2 mins read
bb644c95-1ac4-4e41-ac2b-d9a34c03ded9
-

சென்னை: இணை­யத்­தில் உள்ள விளை­யாட்­டு­களை ஆட பெற்­றோர் அனு­ம­திக்­கா­த­தால் விரக்தி அடைந்த 11ஆம் வகுப்பு பள்ளி மாண­வன் பல லட்­சம் ரொக்கப்­பணம், தங்க நகை­க­ளு­டன் வீட்டை விட்டு வெளி­யே­றிய சம்­ப­வம் சென்­னை­யில் நிகழ்ந்­துள்­ளது.

வண்­ணா­ரப்­பேட்­டையில் வசித்து வரும் அம்­மா­ண­வன், தின­மும் பல மணி நேரம் இணை­யத்­தில் உள்ள விளை­யாட்­டு­களில் பங்­கேற்று வந்­துள்­ளான்.

இதை­ய­டுத்து, படிப்­பில் கவ­னம் செலுத்­து­மாறு பெற்­றோர் கண்டித்­துள்­ள­னர். மேலும், இணை­யத்தைப் பயன்­ப­டுத்­த­வும் தடை விதித்­த­னர்.

இத­னால் கோப­மும் விரக்தி­யும் அடைந்த அம்­மா­ண­வன், வீட்டை விட்டு வெளி­யே­று­வது என்­றும் வாய்ப்பு இருந்­தால் ஏதாவது வெளி­நாட்­டுக்­குச் செல்­வது என­வும் திட்­ட­மிட்­டுள்­ளான்.

அதன் பின்­னர் வீட்­டில் இருந்த ரூ.33 லட்­சம் ரொக்­கப்­ப­ணத்­தை­யும் 213 பவுன் தங்க நகை­க­ளை­யும் எடுத்­துக்­கொண்டு கடந்த 17ஆம் தேதி திடீ­ரென மாய­மா­னான் அம்­மா­ண­வன்.

இத­னால் அதிர்ச்சி அடைந்த பெற்­றோர் காவல்­து­றை­யில் புகார் அளித்­த­னர். போலி­சார் துரித நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­னர்.

மாண­வ­னின் கைபேசி எண்ணை வைத்து, தாம்­ப­ரம் பேருந்து நிலை­யத்­தில் இருப்­ப­தைக் கண்­டு­பி­டித்து அவனை மடக்­கிப் பிடித்­த­னர்.

விசா­ர­ணை­யில், அவன் நேபா­ளத்­துக்­குச் செல்ல திட்­ட­மிட்­ட­தும் அதற்­காக கொரோனா பரி­சோ­தனை செய்­து­கொண்­ட­தும் தெரிய வந்­தது.

மேலும், அதிக நகை­களை எடுத்­துச் சென்­றால் ஏதே­னும் கேள்வி எழும் என்று யோசித்து மொத்த நகை­களை 70 லட்­சம் ரூபாய்க்கு அட­மா­னம் வைக்க முயன்­றுள்­ளான் அம்­மா­ண­வன்.

தவிர, புதிய கைபேசி ஒன்றை வாங்கி, அதை வைத்து நண்­பர்­களு­டன் இணை­யம் வழி விளை­யா­டி­ய­தா­க­வும் இரு தினங்­க­ளாக தாம்­ப­ரம் பகு­தி­யில் உள்ள தங்கு­வி­டு­தி­யில் அறை எடுத்து தங்­கி­ய­தா­க­வும் அம்­மா­ண­வன் போலி­சாரி­டம் தெரி­வித்­துள்­ளான்.