சென்னை: மத்திய அரசின் திட்டங்களுக்கு இந்தி மொழியில் மட்டுமல்லாமல் தமிழிலும் பெயர் வைக்க வேண்டும் என வலியுறுத்தி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்தி மொழியில் வைக்கப்படும் பெயர்கள் பொதுமக்களில் பலருக்கு புரியவில்லை என்பதால் தமிழில் அப்பெயர்களை மொழிபெயர்க்க வேண்டும் என தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன்.
"மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டில் அமல்படுத்தும்போது தமிழக அரசின் அரசாணை, விளம்பரங்கள், செய்திக்குறிப்புகளில் மேற்படி திட்டங்களின் பெயர்களை தமிழில் குறிப்பிடுகிறார்கள்.
"ஏற்கெனவே அமலில் உள்ள மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கான பெயர்களையும் தமிழில் மொழிபெயர்க்க உத்தரவிட வேண்டும்," என்று ராம்குமார் ஆதித்யன் தமது மனுவில் வலியுறுத்தி உள்ளார்.
அம்மனுவை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கானது என்றும் மொழியை மொழியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டது.
மேலும், விசாரணையை நவம்பர் 22ஆம் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.