பண மோசடி: அமைச்சரின் முன்னாள் உதவியாளர் கைது

பண மோசடி: அமைச்சரின் முன்னாள் உதவியாளர் கைது

1 mins read
a04f88c0-c789-4e71-bba6-c8870ac6b5dc
-

சென்னை: தமி­ழக சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் போட்­டி­யிட வாய்ப்பு வாங்கித் தரு­வ­தாக கூறி ஐம்­பது லட்­சம் ரூபாய் பெற்று மோசடி செய்­த­தாக மத்­திய அமைச்­சர் கிஷன் ரெட்­டி­யின் முன்­னாள் உத­வி­யா­ளர் நரோத்­த­மன் மீது வழக்­குப் பதி­வாகி உள்­ளது.

இதை­ய­டுத்து, நரோத்தமன் அவரது தந்­தை­யு­டன் கைது செய்யப்­பட்­டுள்­ளார்.

திரு­வண்­ணா­ம­லை­யைச் சேர்ந்த புவ­னேஸ்­கு­மார் என்­பவர், தனது சித்­தப்பா மக­ளுக்கு தேர்­த­லில் போட்­டி­யிட வாய்ப்பு கேட்டு நரோத்­த­ம­னி­டம் ஐம்­பது லட்­சம் ரூபாய் கொடுத்­த­தாக கூறி­யுள்­ளார்.

பணத்தைப் பெற்­றுக்­கொண்ட நரோத்­த­மன், வாய்ப்பு வாங்கித் தரா­த­து­டன், பணத்தை திருப்பித்­தர­வும் மறுத்­து­விட்­ட­தாக கூறி­யுள்ள புவ­னேஸ்­கு­மார், இந்த மோச­டி­யில் நரோத்­த­ம­னின் தந்­தைக்­கும் பங்­குள்­ள­தாக தமது புகா­ரில் குறிப்­பிட்­டுள்­ளார்.

இந்த புகாரை அடுத்து அமைச்­ச­ரின் உத­வி­யா­ளர் பொறுப்­பில் இருந்து நீக்­கப்­பட்ட நிலை­யில், சென்னை போலி­சார் நரோத்­த­மனை­யும் அவ­ரது தந்­தை­யை­யும் கைது செய்­துள்­ள­னர்.

இந்த வழக்கு தொடர்­பாக மேலும் ஒரு­வர் தேடப்­பட்டு வரு­வ­தா­க­வும் தனிப்­படை போலி­சார் அவரை நெருங்­கி­விட்­ட­தா­க­வும் காவல்­துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.