புதுக்கோட்டை: ஆடு திருடுபவர் களை எப்படியும் பிடித்துவிட வேண்டும் என்ற முயற்சியுடன் அவர்களை விடாது விரட்டிச் சென்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பூமிநாதன் சந்தேகப் பேர்வழிகளால் கொல்லப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் நேற்று அதிகாலையில் இந்தச் சம்பவம் நடந்தது.
குற்றவாளிகளைப் பிடிக்க எட்டு தனிப்படை போலிஸ் குழுவை அமைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ஆறு பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக் கின்றன.
திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தவர் பூமிநாதன். நேற்று அதிகாலை 2 மணியளவில் கீரனூரை அடுத்த பள்ளப்பட்டியில் அவர் சுற்றுக்காவல் பணியில் இருந்தபோது, ஆடு திருடும் கும்பலைத் தனியாக இரு சக்கர வாகனத்தில் விரட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்பொழுது அந்தக் கும்பல் அவரைத் தாக்கிக் கொன்றுள்ளது.
கீரனூர் அருகே தலையில் வெட்டுக்காயத்துடன் சடலமாக பூமிநாதன் மீட்கப்பட்டார்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக பழைய குற்றவாளிகள் ஆறு பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
பள்ளத்துப்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் பதிவாகி இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்தும் போலிசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
இதற்கிைடயே, கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத் தினருக்கு ரூ.1 கோடி நிதி உதவியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

