தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

151 உடற்பிடிப்பு மையங்களில் தனிப்படை போலிசார் சோதனை

2 mins read
3bfd46e6-1118-415c-a90b-8835145c6343
-

சென்னை: சென்­னை­யில் 151 உடற்­பி­டிப்பு மையங்­களில் ஒரே நேரத்­தில் தனிப்­படை போலி­சார் அதி­ரடி சோத­னை­யில் ஈடு­பட்­ட­னர்.

அங்கு ரக­சி­ய­மாக பாலி­யல் தொழில் நடப்­ப­தாக வந்த புகாரை அடுத்து போலி­சார் இந்த அதி­ரடி நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­னர்.

இதை­ய­டுத்து, சென்ைன மாநகர போலிஸ் ஆணை­யர் சங்­கர் ஜிவால் உத்­த­ர­வின்­படி, சென்­னை­யில் செயல்­படும் 151 உடற்­பி­டிப்பு மையங்­கள், ஸ்பாக்­களில் 12 தனிப்படையின் கீழ் 150 குழுவை அமைத்து ஒரே நேரத்­தில் சோத­னை­யில் ஈடு­பட்­ட­னர்.

அப்­போது, மாமூல் வசூ­லிக்­கும் போலிஸ் அதி­கா­ரி­கள், பாலி­யல் தொழில் பின்­ன­ணி­யில் உள்ள முக்­கிய புள்­ளி­கள் குறித்த தக­வல்­களும் ஆவ­ணங்­களும் சிக்­கியதாகவும் பாலி­யல் தொழி­லில் ஈடு­பட்ட பெண்­கள் மீட்­கப்­பட்­டதாகவும் தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சென்­னை­யில் ஏரா­ள­மான உடற்­பி­டிப்­புக் கூடங்­கள் செயல்­ப­டு­கின்­றன. ஆயுர்­வேத சிகிச்சை என்ற பெய­ரில் இவை நடத்­தப்­ப­ட்டு வரு­கின்­றன. சென்னை மாந­க­ராட்­சி­யில் இதற்கு அனு­மதி பெற வேண்­டும்.

மாந­க­ராட்­சி­யும் விதி­மு­றை­க­ளுக்கு உட்­பட்­டுத்தான் இந்த கூடங்களுக்கு அனு­மதி வழங்­கு­வதாகவும் கூறப்படுகிறது.

உடற்­பி­டிப்பு மையங்­களில் ஆண்­க­ளுக்கு ஆண்­களும் பெண்­க­ளுக்கு பெண்­களும் மட்­டுமே உடலைப் பிடித்துவிடும் சேவையை வழங்க வேண்டும்.

ஆனால், இந்த விதி­மு­றையை மீறி ஆண்­க­ளுக்கு பெண்­களும் பெண்­க­ளுக்கு ஆண்­களும் உடல் பிடித்துவிட்டு சட்ட விரோத செயல்­களில் ஈடு­ப­டு­வ­தாக போலி ­சா­ருக்கு புகார்­கள் வந்­தன.

அத்துடன், சென்­னை­யில் 151 உடற்­பி­டிப்பு மையங்­கள் விதி­மு­றை­களை மீறி­யும் உரிய அனு­மதி பெறா­ம­லும் செயல்­ப­டு­வ­தாகவும் பட்­டி­ய­லி­டப்­பட்­டது.

இதையடுத்து அண்ணாநகர், விருகம்பாக்கம், கேகே நகர், தி.நகர், அடையார், திருவான்மியூர், கிண்டி உட்பட சென்னை முழுவதும் உள்ள அனைத்து கூடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடந்தது.

அப்­போது சட்ட விரோ­த­மாக உடற்­பி­டிப்பு மையங்­களை நடத்­திய உரி­மை­யா­ளர்­களும் தரகர்களும் பிடி­பட்­ட­னர். இந்த சோதனை தொடர்பான விசாரணைகள் மேலும் தொடர்ந்து வருகின்றன.