காவலர் கொலை: சிறார் உட்பட நால்வர் கைது

2 mins read
0a9000ba-e1d1-48bb-9994-4cb9ff0b48b8
கொல்லப்பட்ட பூமி­நா­தன். வலது: குற்றவாளி மணிகண்டன்.படங்கள்: ஊடகம் -
multi-img1 of 2

புதுக்­கோட்டை: சிறப்பு உதவி ஆய்­வா­ளர் பூமி­நா­தன் கொல்­லப் பட்ட சம்­ப­வம் தொடர்­பில் இரு சிறு­வர்­கள், ஓர் இளை­யர் உள்­பட நால்­வரை நேற்று தனிப்­படை போலி­சார் அதி­ர­டி­யாக கைது செய்­த­னர்.

தஞ்­சா­வூர், புதுக்­கோட்­டை­யைச் சேர்ந்த 10 வயது, 17 வய­தி­லான இரு சிறு­வர்­கள், 19 வயது இளை­யர் மணி­கண்­டன் உட்பட நால்­வர் போலி­சா­ரின் பிடி­யில் சிக்கி உள்­ள­னர்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­களை ரக­சிய இடத்­தில் வைத்து போலி­சார் விசா­ரித்து வரு­கின்­ற­னர்.

புதுக்­கோட்டை அருகே ஆடு திரு­டி­ய­வர்­க­ளைப் பிடிப்­ப­தற்­காக அவர்­களை இரு சக்­கர வாக­னத்­தில் துரத்­திச்­சென்ற திருச்சி, நாவல்­பட்டு காவல்­நி­லைய சிறப்பு உதவி காவல் ஆய்­வா­ளர் பூமி­நாதன், 51, ஞாயி­றன்று அதி­கா­லை­யில் படு­கொலை செய்­யப்­பட்­டார்.

ஒரு காவல் அதி­கா­ரி­யையே கொன்­றுள்ள சம்­ப­வம் தமி­ழக மக்­கள் மத்­தி­யில் பர­ப­ரப்­பா­கப் பேசப்­பட்ட நிலை­யில், கொலை­யா­ளி­க­ளைப் பிடிக்க எட்டு தனிப்­ப­டை­கள் உட­ன­டி­யாக அமைக்­கப்­பட்­டன.

தனிப்­படை போலி­சார் சம்­ப­வம் நடந்த பகு­தி­யி­லும் அதன் சுற்று வட்­டா­ரப் பகு­தி­க­ளி­லும் சந்­தேக நபர்­களை வலை­வீசி தேடி­வந்­ததை அடுத்து நால்­வர் பிடி­பட்­டுள்­ள­னர்.

கொல்­லப்­பட்ட சிறப்பு உதவி ஆய்­வா­ளர் குடும்­பத்­துக்கு ரூ.1 கோடி நிதி உத­வி­யும் குடும்­பத்­தில் ஒரு­வ­ருக்கு அரசு வேலை­யும் வழங்­கப்­படும் என்று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் அறி­வித்­தி­ருந்­தார்.

''ஆடு திரு­டர்­க­ளைப் பிடித்­த­தும் சக போலி­சா­ரின் உத­விக்­காக பூமி­நா­தன் காத்­தி­ருந்­தார். அப்­போது திரு­டர்­கள் இரு­வர் தப்ப முயன்­றுள்­ள­னர். அவர்­க­ளு­டன் தனி­யா­ளாக பூமி­நா­தன் போரா­டியபோது, திரு­டர்­கள் தங்­க­ளது வாக­னத்­தில் வைத்­தி­ருந்த கத்­தியை எடுத்து பூமி­நா­த­னின் தலை­யில் வெட்­டி­விட்டு தப்­பி­யுள்­ள­னர். கொலை­யா­ளி­கள் தூக்கி எறிந்த பூமி­நா­த­னின் தொப்பி, வாக்கி-டாக்கி, கைபேசி மீட்­கப்­பட்­டது,'' என்­று போலி­சார் விவரம் கூறியுள்ளனர்.