காய்ச்சல், வயிற்றுப்போக்கால் நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை தமிழக மக்களைப் புதிதாக அச்சுறுத்தும் நோரோ தொற்று

காய்ச்சல், வயிற்றுப்போக்கால் நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை தமிழக மக்களைப் புதிதாக அச்சுறுத்தும் நோரோ தொற்று

2 mins read
d0c8903e-725c-4e37-823a-6ee123d74530
சென்னையில் வெள்ளநீர் வடிந்தபிறகு ஒரு தெருவில் சேறும் சகதியுமாகக் கிடக்கும் சாக்கடைக் கழிவுகளைக் குடியிருப்பாளர்கள் அகற்றினர். நோரோ கிருமி மக்களிடம் பரவுவதைத் தடுக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். தேங்கிய கழிவுநீரை முழுமையாக அகற்றவேண்டும். காய்ச்­சிய நீரை மட்­டுமே பருகவேண்­டும் என்கின்றனர் சுகாதார அதிகாரிகள். படம்: இபிஏ -

சென்னை: தமி­ழக மக்­கள் மத்­தி­யில் நோரோ என்ற கிரு­மித்­தொற்று புதிய அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்தி வரு­வ­தாக தமி­ழக சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது.

அண்­மை­யில் பெய்த வட கிழக்­குப் பரு­வ­மழை கார­ண­மாக ஆங்­காங்கே மழைநீர் தேங்கி நின்­றது. இந்நீரோடு கழிவு நீரும் குப்பை கூளங்­களும் சேர்ந்து தண்­ணீரை மிக­வும் அசுத்­த­மாக்கி இருந்­தன.

இந்­நி­லை­யில், இந்த தண்ணீா் மாசு­பாட்­டி­னால் தமி­ழ­கத்­தில் பலா் நோரோ கிரு­மித் தொற்­றுக்­குள்­ளாகி இருக்­க­லாம் என அஞ்­சப்­ப­டு­கிறது.

இந்­தக் கிரு­மித்­தொற்­றின் முக்­கிய அறி­கு­றி­யா­கக் கரு­தப்­படும் காய்ச்சல், வயிற்­றுப்­போக்­கால் நூற்­றுக்­கணக்­கா­னோர் பாதிக்­கப்­பட்டு மருத்­துவமனை­களில் சிகிச்சை பெற்று வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதை­ய­டுத்து, மாநி­லம் முழு­வ­தும் நோரோ கிரு­மித் தடுப்பு நடவ டிக்­கை­களைத் தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ளனா்.

கடந்த இரு ஆண்­டு­க­ளாக கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்டு மெல்ல மெல்ல அதி­லி­ருந்து மக்கள் மீண்டுவரும் இந்தத் தரு­ணத்­தில் நோரோ தொற்று புது­ அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்தி உள்­ள­தாக தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

அதி­லும், குறிப்­பாக அண்டை மாநி­ல­மான கேர­ளத்­தில் 20க்கும் மேற்­பட்­டோ­ருக்கு இத்­த­கைய பாதிப்பு இருப்­ப­தாக அதி­கா­ர­பூர்வ மாக அறி­விக்­கப்­பட்­டுள்ளது.

பொது­வாக குளிா், மழைக் காலங்­களில் இதன் தாக்­கம் அதி தீவி­ர­மாக இருக்­கும் என்பதால், குழந்­தை­கள், நோய் எதிர்ப்­புச் சக்தி குறைந்­த­வா்­கள், முதி­ய­வர்­கள் அதிக அள­வில் இந்த நோரோ தொற்று பாதிப்­புக்கு ஆளா­க நேரிடும் என்பதால் கவனமாக இருக்கவேண்டும் என்று எச்சரித் துள்ளனர் மருத்­து­வா்­கள்.

இது­கு­றித்து பொது நல மருத்­துவ சிகிச்சை நிபுணா் டாக்டா் ஏ.பி. ஃபரூக் அப்­துல்லா கூறு­கை­யில், "ெகாரோனா கிருமி நுரை­யீ­ர­லைத் தாக்­கு­கிறது. ஆனால், நோரோ தொற்று முழுக்க முழுக்க ஜீரண மண்­டல நோயா­கவே கரு­தப்­படு­கிறது. சுகா­தா­ர­மற்ற உணவு, மாசு­பட்ட தண்­ணீரை உட்­கொள்­வ­தால் ஒரு­வ­ருக்கு நோரோ தொற்று ஏற்­ப­ட­லாம். இதனால், காய்ச்­சல், வாந்தி, வயிற்­றுப்­போக்கு ஏற்­படக்கூடும்," என்கிறார்.