பாலாற்று வெள்ளத்தில் இடிந்து விழுந்த வீடு

பாலாற்று வெள்ளத்தில் இடிந்து விழுந்த வீடு

1 mins read
63a93436-6ff7-4878-907c-b9da4d8f5d88
-

வேலூர்: வேலூர் மாவட்­டம் விரிஞ்சி­பு­ரம் அருகே பாலாற்­றில் ஏற்­பட்ட வெள்­ளப்­பெ­ருக்­கின் கார­ண­மாக, ஆற்­றங்­க­ரை­யோ­ரம் இருந்த வீடு வெள்­ளத்­தில் அடித்­துச் செல்­லப்­பட்­டது.

காம­ரா­ஜ­பு­ரம் பகு­தி­யில் பாலாற்­றின் கரை­யோ­ரம் இருந்த கூலித்­தொ­ழி­லாளி ரமேஷ் என்­ப­வ­ரின் கான்­கி­ரீட் வீடு இடிந்து விழுந்து வெள்­ளத்­தில் அடித்­துச்­செல்­லப்­பட்­டது. இதே­போல் பசு­மாத்­தூர் கிரா­மத்­தில் பாலாற்­றின் கரையோரம் இருந்த மாடி வீடு கடந்த இரு தினங்க­ளுக்கு முன்­னர் அடித்­துச்­செல்­லப்­பட்­டது. வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்ட கரை­யோ­ரப் பகு­தி­களில் வசிக்­கும் மக்­கள் மீட்­கப்­பட்டு முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இதற்­கி­டையே, கட­லூர் மாவட்­டத்­தில் தென்­பெண்ணை ஆற்று வெள்­ளத்­தி­லி­ருந்து 10,000 பேர் மீட்­கப்­பட்­ட­தாக மாவட்ட கண்­கா­ணிப்பு அலு­வ­லர் அன்­சுல் மிஸ்ரா தெரி­வித்­துள்­ளார்.