ஸ்டாலின்: தமிழகம் முதன்மை மாநிலமாகும்

ஸ்டாலின்: தமிழகம் முதன்மை மாநிலமாகும்

2 mins read
d75f5b4b-0ef6-41bd-ab0a-14894dd32a86
கோவை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. படம்: ஊடகம் -

ரூ.3,723 கோடி முதலீடுகள் ஈர்ப்பு: 74,835 பேருக்கு வேலைவாய்ப்பு

கோவை: தமி­ழ­கத்தை தொழில்­து­றை­யில் சிறந்த, முதன்மை மாநி­ல­மாக வளர்த்­தெ­டுக்க வேண்­டும் என்­பதே திமுக அர­சின் இலக்கு என்று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் கூறி­யுள்­ளார்.

கோவை­யில் நடை­பெற்ற அரசு விழா­வில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்­தி­யா­வின் முதல் தொழில் முக­வ­ரி­யாக தமிழ்­நாடு மாற வேண்டும் என்­றார்.

கோவை முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்­டின் மூலம் தமி­ழ­கத்­துக்கு கோடிக்­க­ணக்­கான முத­லீ­டு­கள் ஈர்க்­கப்­பட உள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், இதன்­வழி லட்­சக்­க­ணக்­கான இளை­யர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு உரு­வாக இருக்­கிறது என்­றார்.

"தொழில் துறையை வளர்ப்­ப­தன் மூல­மாக மக்­களை வளர்க்க முடி­யும். மக்­க­ளது வளர்ச்­சி­யில் தான் நாட்­டின் வளர்ச்சி உள்­ளது. இந்­தி­யா­வின் முன்­னணி தொழில் மாநி­ல­மாக தமிழ்­நாட்டை மாற்றி காட்­டு­வோம்.

"நான் எப்­போ­தும் அதி­கம் பேச­மாட்­டேன். செய­லில் என்­னு­டைய பணி­கள் இருக்­கும். பேச்சைக் குறைத்து செய­லில் திற­மையைக் காட்டு என்ற பழமொழிக்­கேற்ப செயல்­ப­டு­வோம்," என்­றார் முதல்­வர் ஸ்டா­லின்.

கோவை மாவட்­டத்தை சிறந்த மாவட்­ட­மாக, அனைத்து உட்­கட்­ட­மைப்பு வசதிகளைக் கொண்­டி­ருக்­கக்­கூ­டிய மாவட்­ட­மாக மாற்ற தமி­ழக அரசு திட்­ட­மிட்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், பின்­னர் ரூ.646 கோடியே 61 லட்­சம் மதிப்­பி­லான நலத்­திட்ட உத­வி­களை 25 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட பய­னா­ளி­க­ளுக்கு வழங்­கி­னார்.

இதற்­கி­டையே கோவை­யில் நடை­பெற்ற முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்­டில் முதல்­வர் ஸ்டா­லின் முன்­னி­லை­யில் ரூ.34,723 கோடிக்கு புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தா­கின. மொத்­தம் 52 நிறு­வ­னங்­க­ளு­டன் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் செய்து கொள்­ளப்­பட்­ட­தாக தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.

இதன் மூலம் 74,835 பேருக்கு வேலை­வாய்ப்பு கிடைக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது என்றும் தமிழக அரசு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.