உதவி ஆய்வாளர் கொலை: சிறுவர்களும் தாக்கினர்

உதவி ஆய்வாளர் கொலை: சிறுவர்களும் தாக்கினர்

1 mins read
851be596-61ec-43bb-9f0f-2faaf9f365de
-

திருச்சி: காவல் உதவி ஆய்­வா­ள­ரைக் கொன்ற இளை­யர் மணி­கண்­டன் அவரை பின்­பு­ற­மா­கத் தாக்­கி­யது தெரிய வந்­துள்­ளது.

19 வய­தான மணி­கண்­டன் ஆடு­க­ளைத் திருடி விற்று வந்­துள்­ளார். அவ­ருக்கு உத­விய இரு சிறு­வர்­களும் தற்­போது சிக்­கி­யுள்­ள­னர்.

செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய திருச்சி டிஐஜி சர­வண சுந்­தர், மணி­கண்­ட­னு­டன் சேர்த்து இரண்டு சிறு­வர்­களும் உதவி ஆய்­வா­ள­ரைத் தாக்­கி­ய­தா­கத் தெரி­வித்­தார்.

"சிறு­வர்­கள் தாக்­கி­ய­தா­கக் கூறு­வது நம்­பும்­ப­டி­யாக இல்லை என சிலர் கூறு­கி­றார்­கள். இந்­தக் கொலைச் சம்­ப­வத்தை அர­சி­யல் ரீதி­யா­கப் பார்க்­கக்கூடாது," என்றார் டிஐஜி சரவண சுந்தர்.

இதற்கிடையே, கைதான மூவருக்கும் போதைப் பழக்கம் இருந்ததாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.