ஜெயலலிதா வீட்டை அரசு கையகப்படுத்தியது ரத்து

ஜெயலலிதா வீட்டை அரசு கையகப்படுத்தியது ரத்து

2 mins read
59e1209a-3db9-4332-b97a-a1b3a0514509
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டை வாரிசுதாரர்களான தீபா, தீபக்கிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோப்புப் படம்: இந்திய ஊடகம் -

சென்னை: முன்­னாள் முதல்­வர் காலஞ்­சென்ற ஜெய­ல­லிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்­ல­மான வேதா நிலை­யத்தை அரசு கைய­கப்­ப­டுத் தியதை சென்னை உயர் நீதி­மன்றம் நேற்று அளித்த அதி­ர­டித் தீர்ப்பின் மூலம் ரத்து செய்து உள்­ளது.

அந்த இல்­லத்தை அர­சு­டைமை ஆக்­கிய முந்­தைய அதி­முக அரசு, அதனை நினைவு இல்­ல­மாக மாற்றப்படும் என அறி­வித்திருந்­தது. வேதா நிலை­யம் தவிர அங்­குள்ள அசை­யும் சொத்­து­களும் அரசு உட­மை­யாக்­கப்­பட்­டன.

இந்­தச் சட்­டத்தை எதிர்த்து ஜெய­ல­லி­தா­வின் வாரி­சு­க­ளான தீபா, தீபக் ஆகிய இரு­வ­ரும் சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடுத்­த­னர். அதே­போல வேதா நிலை­யத்­துக்கு 67 கோடியே 90 லட்­சம் ரூபாயை இழப்­பீ­டாக நிர்­ண­யித்து பிறப்­பிக்­கப்­பட்ட உத்­த­ரவை எதிர்த்­தும் வழக்கு போடப்­பட்­டது. இந்த இரு வழக்­கு­க­ளை­யும் நீதி­பதி சேஷ­சாயி விசா­ரித்­தார்.

அப்­போது, தீபா மற்­றும் தீபக் தரப்­பில் தனி­ந­பர் சொத்­து­களை கைய­கப்­ப­டுத்­து­வது தொடர்­பாக சட்­டம் இயற்ற அர­சுக்கு அதி­கா­ர­மில்லை என­வும் வேதா நிலை­யத்தை அர­சுடைமை­யாக்கி பிறப்­பித்த சட்­டம் செல்­லாது என்­றும் நினைவு இல்­ல­மாக மாற்­றத் தடை விதிக்க வேண்­டும் என்­றும் வாதி­டப்­பட்­டது.

மேலும் வாரி­சு­க­ளாக அறி­விக் கப்பட்ட தங்­களை ஆலோ­சிக்­கா­மல் நிலம் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­ட­தா­க­வும் அவர்­கள் தெரி­வித்­த­ னர்.

வீட்­டிற்கு 67 கோடியே 90 லட்ச ரூபாய் அள­விற்கு இழப்­பீடு நிர்­ண­யித்து, அந்த தொகையை சென்னை மாவட்ட நீதி­மன்­றத்­தில் நிலம் கைய­கப்­ப­டுத்­து­தல் அதி­காரி செலுத்­தி­யது தவறு என­வும் தீபா, தீபக் தரப்­பில் தெரி­விக்­கப்பட்­டது.

அனைத்து தரப்பு வாதங்­க­ளை­யும் கேட்ட நீதி­பதி சேஷ­சாயி, தீர்ப்பை தேதி குறிப்­பி­டா­மல் தள்­ளி ­வைத்து உத்­த­ர­விட்டு இருந்­தார்.

இந்த நிலை­யில் நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது "ஜெய­ல­லிதா வாழ்ந்த இல்­லத்தை அர­சுடைமை ஆக்­கி­யது செல்­லாது," என்று உயர் நீதி­மன்றம் தீர்ப்பு அளித்­தது.

வேதா நிலை­யத்தை மூன்று வாரங்­களில் வாரி­சு­க­ளான தீபா, தீபக்­கி­டம் ஒப்­ப­டைக்க வேண்­டும் என்று உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்டு உள்­ளது. இது மட்­டு­மல்­லா­மல் வேதா நிலை­யம் ஒரு நினை­வி­ட­மா­க­வும் மெரினா கடற்­க­ரை­யில் கட்­டப்பட்டு உள்ள 'பீனிக்ஸ்' என்ற பெயரில் மற்­றொரு நினை­வி­ட மாகவும் இரண்டு நினைவிடங்­கள் எதற்கு என்று உயர் நீதி­மன்­றம் கேள்வி எழுப்­பி­யது.