அதிமுக கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

அதிமுக கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

1 mins read
6443399f-81c9-4c65-bec5-dc426968a39a
-

சென்னை: அதி­முக மாவட்ட செய­லா­ளர்­கள் கூட்­டத்­தில் கடும் வாக்கு­வா­தம் ஏற்­பட்­டுள்­ளது.

ஒரு தரப்­பி­னர், அதி­மு­கவை வழி­காட்­டு­தல் குழு­தான் நடத்த வேண்­டும் என்று கோரிக்கை விடுத்­த­னர். இதற்கு எடப்­பாடி பழ­னி­சாமி தரப்­பி­னர் எதிர்ப்பு தெரி­வித்­த­னர்.

சென்னை ராயப்­பேட்­டை­யில் உள்ள கட்­சித் தலைமை அலு­வ­ல­கத்­தில் நேற்று காலை எடப்­பாடி பழ­னி­சாமி, ஓ.பன்­னீர்­செல்­வம் தலை­மை­யில் அதி­முக மாவட்ட செய­லா­ளர்­கள் கூட்­டம் தொடங்­கி­யது.

கூட்­டத்­தில் அ.தி.மு.க. வழி­காட்­டு­தல் குழுவை சீர­மைக்க வேண்­டும். 11 பேர் எண்­ணிக்கை கொண்ட குழுவை 18ஆக அதி­க­ரிக்க வேண்­டும். வழி­காட்­டு­தல் குழு­வுக்கு கூடு­தல் அதி­கா­ரம் வழங்க வேண்­டும் என்று ஓ. பன்னீர்செல்­வம் தரப்­பில் கோரிக்கை வைக்­கப்­பட்­டது. இத­னால் கூட்­டத்­தில் சல­ச­லப்பு ஏற்­பட்­டது. அ.தி.மு.க.வை வழி­காட்­டு­தல் குழு­தான் நடத்த வேண்­டும் என்று செங்­கோட்­டை­ய­னும் வலி­யு­றுத்­தி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மேலும் சிலர் முன்­னாள் அமைச்­சர் செங்­கோட்­டை­யனை குழுவின் தலை­வ­ரா­கவோ அவைத் தலை­வ­ரா­கவோ நிய­மிக்­க­லாம் என்று கூறி­னர். இதற்கு எடப்­பாடி பழ­னி­சாமி தரப்­பி­லி­ருந்து கடும் எதிர்ப்பு கிளம்­பி­ய­தால் கூச்சலும் குழப்பமும் ஏற்­பட்­டது.