'போயிங் 737 மேக்ஸ்' மீண்டும் பறக்கிறது

'போயிங் 737 மேக்ஸ்' மீண்டும் பறக்கிறது

1 mins read
deaf8d9f-0568-47da-abe8-b82077118b91
-

புதுடெல்லிக்கு அருகே ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 'போயிங் 737 மேக்ஸ்' விமானத்தில் பயணிகள் உட்கார்ந்துள்ளனர். எத்தியோப்பிய ஏர்லைன்சின் 'போயிங் 737 மேக்ஸ்' ரக விமானம் 2019ல் விபத்துக்கு உள்ளாகி அதில் பயணம் செய்த 157 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்தியாவில் இத்தகைய விமானம் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. 2018ல் இந்தோனீசியாவின் லயன் ஏர் 'போயிங் 737 மேக்ஸ்' விமானமும் விபத்தில் சிக்கி 189 பேர் மாண்டனர். தற்போது 'போயிங் 737 மேக்ஸ்' விமானங்களில் இருந்த பிரச்சினைகள் களையப்பட்டு விமானத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் அவை பறக்கத் தொடங்கியுள்ளன. படம்: இபிஏ