சென்னை: தினந்தோறும் புதுப்புது அரசாணைகளை வெளியிட்டு வருகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
நேற்றும் இதுபோல் அவர் வெளியிட்டுள்ள அரசாணையில், பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளின்போது, தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நீண்டகாலமாக தண்டனை அனுப வித்து வரும் 700 ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
நன்னடத்தை, நல்லொழுக்கம், மனிதாபிமான அடிப்படையில் இந்த 700 கைதிகளையும் முன்கூட்டியே விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், பாலியல் வன்கொடுமை, பயங்கரவாதம், சாதி, மத மோதல் உள்ளிட்ட 17 குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் விடுவிக்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று சட்டமன்றத்தில் ஏற்கெனவே முதல்வர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்த அரசாணையைத் தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்த நாள் அடுத்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி வருகிறது.
அந்த சமயத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

