வெள்ள பாதிப்பு பகுதிகளை மறுசீரமைக்க ரூ.4,625 கோடி வழங்கும்படி கோரிக்கை

வெள்ள பாதிப்பு பகுதிகளை மறுசீரமைக்க ரூ.4,625 கோடி வழங்கும்படி கோரிக்கை

1 mins read
e166dad2-540c-4e69-8e94-c33e9edc1fb5
-

சென்னை: தமிழ்­நாட்­டில் மழை வெள்­ளத்­தால் ஏற்­பட்ட பாதிப்­பு­களைச் சீர­மைக்க ரூ.4,625 கோடியை வழங்­க­வேண்­டும் என்று மத்­திய அர­சுக்கு தமி­ழக அரசு கோரிக்கை விடுத்­துள்­ளது.

இம்­மா­தம் 11ஆம் தேதி முதல் தமி­ழ­கத்­தில் பெய்த தொடர் கன­மழை­யால், பல குடி­யி­ருப்­பு­க­ளை வெள்­ளம் சூழ்ந்­தது. விவ­சாய நிலங்­களும் நீரில் மூழ்கி அழு­கின. மாடு கன்றுகளும் இறந்து கிடந்தன.

இந்­நி­லை­யில், இந்தப் பாதிப்பு களை நேரில் பார்­வை­யிட்ட மத்­தி­யக் குழு­வினா், தலை­மைச் செய­ல­கத்­தில் முதல்வா் மு.க.ஸ்டா­லினை புதன்­கி­ழமை சந்­தித்­து ஆலோ­சனை நடத்­தி­னர்.

அப்போது மத்­திய அர­சி­டம் தமி­ழக அரசு ஏற்கெனவே கோரிய உட­னடி நிவா­ர­ணத் தொகை­யாக 550 கோடி ரூபா­யும் மறு சீர­மைப்­புப் பணி­க­ளுக்­காக 2,079 கோடி­யை­யும் வழங்கவேண்­டும் என முத­ல்வர் வலி­யு­றுத்­தி­ய­தாக தக­வல்­கள் வெளி­யாகி உள்­ளன.

இது­கு­றித்து வரு­வாய்த் துறை­யினா் செய்தியாளர்களிடம் கூறு­கை­யில், ஏற்­கெ­னவே மத்­திய அர­சுக்கு சமா்ப்­பிக்­கப்­பட்ட முதல்­கட்ட அறிக்­கை­யில் கோரப்­பட்ட தொகை, அத­னைத் தொடா்ந்து ஏற்­பட்ட சேதங்­கள் மதிப்­பீடு செய்­யப்­பட்டு தற்­கா­லிக சீர­மைப்­புப் பணி­க­ளுக்­காக ரூ.1,070.92 கோடி­யும் நிரந்­த­ர­மான சீர­மைப்­புப் பணி­க­ளுக்காக ரூ.3,554.88 கோடி­யும் என மொத்­தம் ரூ.4,625.80 கோடி கூடு­த­லாக அளிக்க மத்­திய அர­சுக்கு கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது எனத் தெரி­வித்­துள்­ள­னர்.