10.5% இட ஒதுக்கீட்டில் அரசு சிறப்பாக செயல்படுகிறது

10.5% இட ஒதுக்கீட்டில் அரசு சிறப்பாக செயல்படுகிறது

1 mins read
f8b4c304-c57b-44cf-82d5-367e52294081
-

கட­லூர்: கட­லூ­ரில் நேற்று நடை­பெற்ற பாமக நிர்­வா­கி­கள் ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் பேசிய பாமக நிறு­வ­னர் மருத்துவர் ராம­தாஸ், 10.5% இடஒதுக்­கீடு பிரச்­சி னை­யில் தமி­ழக அரசு நன்­றா­கச் செயல்­பட்டு வரு­வ­தா­கக் கூறி­னார்.

"10.5% உள் ஒதுக்­கீடு தீர்ப்­புக்கு எதி­ராக தமி­ழக அரசு உச்ச நீதி­மன்­றத்­தில் மேல்­மு­றை­யீடு செய்­துள்­ளது. சிறப்­பான வழக்­கு­ரை­ஞரை நிய­ம­னம் செய்­துள்­ளது. எனவே, தடை உத்­த­ரவு கிடைக்­கும் என்ற நம்­பிக்கை உள்­ளது.

"வரும் தேர்­த­லில் பாமக வெற்றிபெற்று, அன்­பு­மணி ராம­தாசை முதல்­வ­ராக கட்­சி­யி­னர் சப­தம் ஏற்­க­வேண்­டும்," என்­றார்.

கட்­சித் தலை­வர் கோ.க.மணி பேசு­கை­யில், பாம­க­வின் கோட்டை என்று சொல்­லப்­படும் இடங்­க­ளி­லேயே கோட்டை விட்­டுள்­ளோம். அதனை மீட்கவேண்­டும் என்­றார்.