சென்னை: சென்னையில் ஓடும் காரில் நட்சத்திர ஓட்டல் நடனமணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவர் ஒரு வரின் மகன் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய இரு பொறியாளர்களைப் போலிசார் தேடி வருகின்றனர்.
சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கவுதம், 24. கணினிப் பொறியாளரான இவரது தந்தை வெளிநாட்டில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். கவுதம் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்கள் தீபக், சக்தி ஆகியோருடன் தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இரவு விருந்து, நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இவர்கள் தங்களுடன் சேர்ந்து நடனம் ஆடுவதற்கு ஒரு பெண்ணுக்குப் பணம் கொடுத்து அழைத்துச் சென்று, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

