கோவை: கோயம்புத்தூரில் அண்மையில் நடந்த ஏழு நாள் புறா பந்தயப் போட்டியில் மொத்தம் 85 மணி 11 நிமிடங்கள் பறந்து இந்தப் புறா சாதனை படைத்தது.
எஸ். உதயன், 36, என்பவருக்குச் சொந்தமான இந்தப் புறா இதர 12 புறாக்களை வீழ்த்தி இந்தச் சாதனையைப் படைத்தது.
திரு உதயன், கடந்த 20 ஆண்டு காலமாக தன் வீட்டில் 100க்கும் மேற்பட்ட பறவைகளை வளர்த்து வருகிறார். பல பந்தயங்களிலும் அவருடைய பறவைகள் கலந்துகொண்டு சாதனை படைத்து இருக்கின்றன.
அண்மையில் நடந்த பந்தயத்தில் இவருடைய புறா படைத்த சாதனையை கோயம்புத்தூர் மாவட்ட புறா நல்வாழ்வுச் சங்கம் அங்கீகரித்து உள்ளது. இதனையடுத்து தனது புறாவை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச் செய்ய திரு உதயன் திட்டமிடுகிறார்.