சென்னை: ரசாயனம், பெட்ரோலிய ரசாயனத் தொழில்துறைகள் பெரும் வளர்ச்சி வாய்ப்பு உள்ள தொழில்துறைகள் என்று தமிழ்நாடு அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.
கூடுதல் ஊக்குவிப்புகளை வழங்கி அந்தத் தொழில்துறையினருக்கு நிதி ஆதரவை விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதோடு மட்டுமின்றி, தூத்துக் குடி, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய நகர்களில் மூன்று பெரிய பெட்ரோலிய ரசாயன ஆலைகளை அமைக்க அது முதலீடுகளை ஒதுக்கவிருப்பதாக மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
'இந்தியாவில் உலக ரசாயன, பெட்ரோலிய ரசாயன உற்பத்தி மையம்' என்ற மாநாட்டில் பேசிய அமைச்சர், அந்தப் புதிய மூன்று திட்டங்களும் தமிழ்நாட்டை பெட்ரோலிய ரசாயன தொழில்துறை மையமாக மேம்படுத்தும் என்று அறிவித்தார்.